“மீண்டும் இணைகிறது சிஎஸ்கே ஜோடி”..ட்வைன் பிராவோ உடன் இணைந்த மதீஸா பத்திரனா! – விபரம் உள்ளே!

0
750

உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் முக்கியமானது கரீபியன் பிரிமியர் லீக். வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறும் இந்த டி20 போட்டியானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளிலும் உலகெங்கிலும் இருந்து ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வார்கள் .

இந்த வருடத்திற்கான கருபியின் பிரிமியர் லீக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டி தொடரில் ஆர் அணிகள் பங்கு பெற்று விளையாட இருக்கின்றன .

- Advertisement -

இந்தப் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்றது . இந்த ஏலத்தில் உலகின் பல்வேறு சர்வதேச வீரர்களும் கலந்து கொண்டனர் . இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசிய மதிஷா பத்திரனா டிரின்பாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

கைரன் பொல்லார்டு தலைமையிலான இந்த அணியில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ விளையாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . ஐபிஎல் போட்டிகளின் போது பயிற்சியாளராக இருந்த பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகியோரும் மாஸ்டர் கிரிக்கெட் லீக் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் வீரர்களாக களம் இறங்க உள்ளனர் .

இதன் மூலம் பத்திரன ஐபிஎல் தொடருக்குப் பிறகு மீண்டும் பிராவோ உடன் இணைய இருக்கிறார். இந்த வருட கரீபியன் லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியின் ரிலே ரூசோ நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

சென்னை அணிக்கு வலை பெயர்ச்சி பந்துவீச்சாளராக வந்த மதிஷா பத்திரனா கடந்த ஆண்டு 20 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். இந்த ஆண்டு அவர் 14 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் எம் எஸ் தோனி இவரை பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .