இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக டி20 தொடரில் இதே வங்கதேச அணிக்கு எதிராக விளையாட தயாராகி வருகிறது. இதற்காக தற்போது இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கிடையே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 280 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. மேலும் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாட்கள் மட்டுமே நடைபெற்ற ஆட்டத்தில் மிகத் துரிதமாக செயல்பட்ட இந்திய அணி அதிலும் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சை தாண்டி குறிப்பாக ஃபீல்டிங்கில் மிக அபாரமாக செயல்பட்டது. ஒரு கேட்ச் ஆட்டத்தை மாற்றும் என்பது போல இந்திய வீரர்கள் கேட்ச் பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்டனர். இந்த இரு டெஸ்ட் போட்டியிலும் 24 கேட்ச் வாய்ப்புகளில் 23 கேட்சுகள் பிடித்திருப்பது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை பாராட்டி பேசி இருக்கிறார்.
இது குறித்து ரோஹித் விரிவாக கூறும்போது ” இந்த விஷயம் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் நான் இதை குறிப்பிட வேண்டும். இந்த டெஸ்ட் தொடரில் எங்களுக்கு வந்த 24 கேட்ச்களில் 23 கேட்ச்ளை நாங்கள் பிடித்தோம்.இது ஒரு சிறந்த முடிவு. குறிப்பாக ஸ்லிப் பகுதிகளில் செல்லும் கேட்சுகள் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் பின்னால் நின்று கொண்டிருந்த வீரர்கள் மிகவும் கூர்மையாக செயல்பட்டனர்.
அது தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கு வேண்டுமானால் எளிதாக தோன்றலாம், அது உண்மையில் அவ்வளவு எளிதானது கிடையாது. என்னை நம்புங்கள் ஏனென்றால் அவர்கள் வழக்கமாக நிற்கும் பொசிஷனை விட சற்று முன்னால் நின்றார்கள். அதனால் வருகிற கேட்ச்கள் அனைத்தையும் எடுப்பது கடினம். அதற்கு தகுந்தவாறு செயல்படும் நேரம் என்பது மிகவும் குறைவு. வீரர்கள் அதற்காக நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:132 ரன்னில் சுருட்டி.. 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி.. தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து மேட்ச்சில் ரிவென்ச்
பீல்டிங் பயிற்சியாளர் திலீப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நான் அதனை கவனித்து இருக்கிறேன். சில முக்கியமான கேட்ஸ்களும் மாற்றத்தை மாற்றுகின்றன” என்று கூறி இருக்கிறார்.