ஆப்கன் டீம்ல இந்த இந்திய வீரர்தான் விளையாடனும்.. அதுக்கு முக்கிய காரணமே இதுதான் – ஹஸ்மத்துல்லா பேட்டி

0
86
Hashmatullah Shahidi

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி இந்தியா கிரிக்கெட் வீரர் ஒருவரை தேர்வு செய்து அவர் ஆப்கானிஸ்தான் அணியில் விளையாட வேண்டும் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி என்பது நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகிறது. ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் அதற்கு அடுத்ததாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முன்னணி அணிகளையே தோற்கடித்து விட்டு அரை இறுதி வரை முன்னேறியது. அது மட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று வரும் இரண்டு அணிகளுக்கிடையான ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதன்முதலாக ஒரு முன்னணி அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.

பந்து வீச்சில் மிக வலுவாக திகழும் ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கில் குர்பாஸ் மற்றும் ஒரு சில வீரர்களை தவிர வலுவான பேட்டிங் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஆப்கானிஸ்தான் அணியில் விளையாட விரும்பும் ஒரு இந்திய வீரராக நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியை தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து கூறிய அவர் “ஆப்கானிஸ்தான் அணியில் விளையாட விரும்பும் வீரர்களாக எனக்கு நிறைய விருப்பம் உள்ளது. ஆனால் இதில் நான் விராட் கோலியை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் அவரது புள்ளி விவரங்கள் மற்றும் செயல் திறனை பாருங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து இருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

ஆனால் வெளியே சென்று 50 முறை 100 ரன்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவரது புள்ளி விவரங்கள் தனக்குத்தானே பேசுகின்றன” என்று கூறி இருக்கிறார். விராட் கோலி தனது ஐம்பதாவது ஒரு நாள் சதத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:304 ரன்.. புரூக் அசத்தல்.. இந்தியாவில் ஆரம்பித்த ஆஸி வெற்றிக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி.. தொடரை தற்காத்தது

இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் சதங்களின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடினால் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒட்டுமொத்த சதங்களின் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -