இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தில் மோதி வருகின்றன. இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக காப்பாற்றி இருக்கிறது.
இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரில் பலமான முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்கின்ற நிலை இருந்தது.
அலெக்ஸ் கேரி மீண்டும் அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து பேசுவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு இந்த முறை ஹெட் விளையாடவில்லை. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மிட்சல் மார்ஸ் 24, மேத்யூ ஷார்ட் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 60 மற்றும் கேமரூன் கிரீன் 42 ரன்கள் எடுத்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
அடுத்து வந்த லபுசேன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 65 பந்தில் 77, மேக்ஸ்வெல் 25 பந்தில் 35, ஆரோன் ஹார்டி 26 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். இதனால் ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
தொடரை காப்பாற்றிய கேப்டன் ஹாரி புரூக்
இந்த நிலையில் அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 0, பென் டக்கெட் 8 அடுத்தடுத்து வெளியேறிய அதிர்ச்சி கொடுத்தார்கள். இதற்கு அடுத்து வந்த வில் ஜேக்ஸ் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் இருவரும் சேர்ந்து பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் ஆடி ஆட்டத்தை மீட்டு எடுத்தார்கள்.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் அடித்தார்கள். இந்த ஜோடி 148 பந்தில் 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ் 82 பந்தில் 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஹாரி புரூக் சதம் அடித்து 94 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 110 ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். அவருடன் லிவிங்ஸ்டன் 20 பந்தில் 33 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 37.4 ஓவரில் 254 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை வந்தது. இதற்குப் பிறகு மழை நிற்காத காரணத்தினால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன்
இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க: சச்சின் பக்கத்துல அந்த விஷயத்துல விராட் போக முடியாது.. அவரோட வேகம் பல ஆண்டா முடிஞ்சு போச்சு – பிராட் ஹாக் கருத்து
மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ஆரம்பித்து தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 14 வெற்றிகள் பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணியின் வெற்றி பயணத்திற்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் இந்த வகையில தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 21 வெற்றிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்திலும் அந்த அணியே 14 வெற்றிகளுடன் இருக்கிறது.