“தம்பி இந்த மேட்ச்தான் உனக்கு கடைசி சான்ஸ்.. விளையாடலனா வீட்டுக்குத்தான் போகனும்” – இந்திய முக்கிய வீரரை எச்சரித்த வாசிம் ஜாபர்!

0
573
Jaffer

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசை பட்டியலில் மிகவும் உயர்வான இடத்தில் இருக்கக்கூடிய அணியாகவும், வணிகரீதியாக மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய அணியாகவும், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய கிரிக்கெட் அமைப்பாகவும் இருக்கக்கூடிய இந்திய கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களில் தனது மோசமான செயல்பாட்டையே பல வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது!

இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் வைத்து முழுதாக ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்லாவிட்டாலும் கூட போராடவாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கே வந்து விட்டது.

- Advertisement -

இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமாகச் சரியான நேரத்தில் மிக முக்கியமான வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து கொண்டே இருப்பதுதான் இருக்கிறது. முக்கிய வீரர்களின் காயம் இந்திய அணியை மொத்தமாக முடக்கி போடுகிறது.

கடந்த டி20 உலக கோப்பையின் போது சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய அணியின் பௌலிங் யூனிட் லீடர் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இருவரும் எதிர்பாராத விதமாக காயம் அடைந்து விளையாடாமல் போனது அணியை தேர்வு செய்வதில் மிகப்பெரிய கடினங்களை உருவாக்கியது. இவர்களின் இழப்பு அந்த உலகக் கோப்பை தொடரில் வெளிப்படையாக எதிரொலித்தது.

தற்போதும் அப்படியான நிலைதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியில் நிலவி வருகிறது. இதற்காக மாற்று வீரர்களைப் பரிசோதிக்க உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்க இருக்கும் ஒருநாள் தொடர்களை பயன்படுத்த இந்திய கிரிகெட் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. ஆனால் அப்படி வாய்ப்பு கொடுக்கப்படும் வீரர்கள் அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களா? தங்களது திறமைக்கேற்றவாறு விளையாடுகிறார்களா? என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ” சூரியகுமார் யாதவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதுதான் கடைசியான வாய்ப்பாகவும் இருக்கும். ஏனென்றால் அதற்குப் பிறகு இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்பி வந்து விடுவார்கள். அதற்குப் பிறகு அவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.

மேலும் அவர் பேட்டிங் செய்யும் விதத்தில் அவர் ஆபத்தான ஷாட்களை அதிகம் எடுக்கிறார். எப்பொழுதும் பவுண்டரிகள் அடிக்க பார்க்கிறார். அவர் சில மூர்க்கத்தனமான ஷாட்கள் விளையாடுகிறார். அதுவே அவரது விக்கெட்டை இழக்கவும் காரணமாக அமைகிறது.இதுவே அவரது இயல்பாக இருந்து வருகிறது.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அவர் ஒவ்வொரு வினாடியிலும், ஒவ்வொரு பந்திலும் பவுண்டரிகள் அடித்துக்கொண்டே இருக்க முடியாது. இந்த அணுகுமுறையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த கிரிக்கெட் வடிவத்தில் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவர் ஒரு துவக்கத்தை பெற்று விக்கெட்டை தருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்!