ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் நாளை மறுநாள் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் துவங்குகிறது. இந்த நிலையில் லெஜெண்ட் பேட்ஸ்மேன் பிரையன் லாரா இந்திய அணியில் யார் அதிக ரன்கள் டி20 உலக கோப்பையில் குவிப்பார்கள்? என்று கூறி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் தற்போதைக்கு முதல் நான்கு இடத்தில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோர் இருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பை தொடர் முடிவில் இந்திய அணிக்காக அல்லது ஒட்டுமொத்த தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களாக வரவேண்டும் என்றால், இந்த நான்கு வீரர்களில் இருந்து ஒருவர் தான் வர முடியும். மற்ற வீரர்களுக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காது.
இந்த நிலையில் அம்பதி ராயுடு இந்திய அணியில் இருந்து யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்கின்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா என்று பதில் அளித்திருந்தார். அவர் தற்போது சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலியை புறக்கணித்து இருந்தார்.
தற்பொழுது இதே கேள்வி பிரையன் லாராவிடமும் முன் வைக்கப்பட்டது. இவரும் விராட் கோலியை புறக்கணித்திருக்கிறார். இவர் இளம் வீரரான தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலை அதிக ரன்கள் குவிப்பார் என்று தேர்ந்தெடுத்து இருக்கிறார். லாராவின் தேர்வும் எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: சாம்சன் கோலிய வச்சு இந்த பிளான் பண்ணுங்க.. டி20 உலக கோப்பை இந்தியாவுக்குதான் – ஆர்பி சிங் உறுதி
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரே இன்னிங்சில் அடித்த நான்கு சாதனையை ஜெய்ஸ்வால்தான் முறியடிப்பார் என்றும் ஏற்கனவே லாரா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த இளம் வீரர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அதை டி20 உலகக் கோப்பை தொடரிலும் வெளிப்படுத்துகிறார். ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? என்பதே சந்தேகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது