இந்தியாவின் புகழ்பெற்ற டி20 வடிவ உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐபிஎல்லின் 18 வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற இருக்கிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் புதிய வீரர்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஐபிஎல் அணிகள் கவனித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் தற்போதைய பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்திய சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் இந்த தொடரில் பங்கு பெற்று விளையாடுகின்றனர். ஒவ்வொரு வீரருக்கும் ஊதியமாக ஒரு அணி அந்த வீரர் மீது போடப்பட்டுள்ள ஏலத் தொகையை வைத்து வழங்கப்படும். மேலும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருது, தொடர் நாயகன் விருது மேலும் ஸ்பெஷல் விருதுகள் என்று பரிசுத்தொகைகள் வழங்கப்படும்.
இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக வருகின்ற டிசம்பர் மாதம் பொறுப்பேற்கும் ஜெய்ஷா ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பில் பிரிமியர் லீக்கில் பங்கு பெறும் வீரர்கள் ஒப்பந்த தொகையோடு சேர்த்து 7.5 லட்ச ரூபாயை போட்டி கட்டணமாக பெறுவார்கள் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஐபிஎல் தொடரின் நிலைத்தன்மை மற்றும் சிறப்பான சாம்பியன் ஆட்டத்தை கொண்டாடும் ஒரு வரலாற்று நிகழ்வாக எங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு ரூபாய் 7.5 லட்ச ரூபாயை போட்டி கட்டணமாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஒப்பந்த தொகையோடு சேர்த்து ரூபாய் 1.05 கோடி ரூபாய் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஐபிஎல் அணியும் போட்டி கட்டணமாக ஒவ்வொரு சீசனுக்கும் 12.60 கோடிகளை ஒதுக்கும். ஐபிஎல் மற்றும் எங்கள் வீரர்களுக்கு இது ஒரு புதிய சகாப்தமாக அமையும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக வீரர்கள் ஏலத் தொகையோடு சேர்த்து ஒவ்வொரு வருடமும் நிரந்தரத் தொகையாக 1.05 கோடி ரூபாய் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கான்பூர் டெஸ்ட்.. மீதி 3 நாட்களாவது போட்டி நடக்குமா.?. மழை வாய்ப்பு எப்படி.. முழு வானிலை விபரம்
ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் வீரர்களின் தக்கவைப்பு விவரங்கள் மற்றும் புதிய விதிகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.