கான்பூர் டெஸ்ட்.. மீதி 3 நாட்களாவது போட்டி நடக்குமா.?. மழை வாய்ப்பு எப்படி.. முழு வானிலை விபரம்

0
297
Rohit sharma

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் முதல் நாளில் மழையின் காரணமாக 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இருப்பினும் இரண்டாவது நாளில் அதிக மழை பெய்து வருவதால் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் அடுத்த மூன்று நாட்களில் இந்த இரண்டு அணிகளுக்கிடையே போட்டி நடைபெறுமா? அல்லது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் 27ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை காரணமாக தாமதமாகவே தொடங்கப்பட்ட போட்டி முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் மட்டுமே வீசி முடிக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது நாளான இன்று அங்கு பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரண்டாவது நாள் ஆட்டமும் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மீதம் உள்ள நாட்களில் ஆவது போட்டி நடைபெறுமா? அல்லது இதே போல் மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்து வரும் நிலையில் அதற்கான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

அதாவது நாளை போட்டி நடைபெற உள்ள நாளில் பகலில் 59 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. 35 சதவீதம் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்ய 14% வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. ஆனால் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் மழை பெய்ய 5 முதல் 6 சதவீத வாய்ப்புகள் மட்டுமே இருப்பதால் அந்த நாட்களில் போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி முற்றிலுமாக கைவிடப்படாமல் இரண்டு நாட்கள் முழுவதுமாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் நாளை போட்டி நடைபெறாமல் போக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குல்தீப் யாதவ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடனே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடப் போவதாக கூறினார்.

இதையும் படிங்க:இந்தியா டெஸ்ட்ல தொடர்ந்து ஜெயிக்க.. இந்த 2 பேர் முக்கிய காரணம்.. அதனால என்னோட பெஸ்ட் 4 பவுலர்ஸ் இவங்கதான் – ஜாகீர்கான் தேர்வு

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே அக்டோபர் ஆறாம் தேதி முதல் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரும் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்கள் வாய்ப்பு பெறுவதற்கான சூழ்நிலையில் நிலவுகிறது.

- Advertisement -