ஐபிஎல்-ல் ஓய்வு பெற்று வெளிநாட்டில் ஆடும் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ வைக்க போகும் ஆப்பு!

0
6650

தற்போது உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் மற்றும் டி10 லீக் தொடர்கள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் இந்த லீப் போட்டிகளில் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு வருகின்றனர் .

சமீபத்தில் கூட அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் கிரிக்கட் லீக் என்ற டி20 போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது இந்தப் போட்டியிலும் ஐபிஎல் அணியில் உரிமையாளர்கள் பல அணிகளை வாங்கி இருக்கின்றனர் . இந்தப் போட்டி தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் இந்தியாவின் அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இவர்களில் அம்பத்தி   ராயுடு  டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது . டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் தான் வாங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பிற நாடு கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொள்வதை தடுக்க பிசிசிஐ நிர்வாகம் கடுமையான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது . இது தொடர்பாக என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என பிசிசிஐ நிர்வாகக் குழு கடும் ஆலோசனையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் தடை விதித்து இருக்கிறது .ஆனால் ஐபிஎல் உட்பட அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு எந்தவித தடையும் இல்லை . இதனால் இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றனர் .

- Advertisement -

ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகிய வீரர்கள் ஐக்கியாரப்பு அமீரகத்தில் வைத்து நடைபெற்ற ஐஎல் டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடினர் . ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பின்னர் ஓய்வு அறிவித்திருக்கும் அம்பத்தி ராயுடு தற்போது அமெரிக்கா டி20 தொடரில் விளையாட இருக்கிறார் . இதனால் இந்தியாவில் விளையாடி வரும் வீரர்கள் பலரும் முன்னரே ஓய்வை அறிவித்துவிட்டு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்குபெறும் அபாயம் இருப்பதால் இந்த விஷயத்தை பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது பிசிசிஐ . இது தொடர்பாக ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கும் அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது .

மேலும் ஓய்வு பெறும் வீரர்கள் ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு எந்தவித வெளிநாட்டில் போட்டிகளிலும் விளையாட கூடாது என புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளதாக அவற்றிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் ஓய்வு பெற்ற வீரர்கள் வருங்காலத்தில் இந்திய அணியில் பயிற்சியாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிர்வாக பொறுப்பில் வரவேண்டும் என்றால் இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் இது தொடர்பான இறுதி முடிவு ஜூலை 7ஆம் தேதி எடுக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன