இந்திய அணி இந்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு மிகச்சிறந்த முறையில் பங்களாதேஷ் அணி தயாராக இருப்பதாக அந்த அணியின் புது வேகப்பந்துவீச்சாளர் நாகித் ராணா கூறியிருக்கிறார்.
முன்பு எப்போதும் இருந்ததைவிட பங்களாதேஷ் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு யூனிட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு டெஸ்ட் தனியாக எடுத்து பார்க்கும் பொழுது பேட்டிங் துறை மற்றும் ஆல்ரவுண்டர்கள் துறை, சுழல் மற்றும் வேகம் என பங்களாதேஷ அணி சிறப்பாகவே காணப்படுகிறது.
150 கிலோமீட்டர் புயல்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வலதுகை வேகப் பந்துவீச்சாளர் நாகித் ராணா பங்களாதேஷ் அணிக்காக அறிமுகமானார். அறிமுகமான முதல் தொடரிலேயே பங்களாதேஷ அணி வரலாற்று வெற்றி பெறுவதற்கு தானும் ஒரு முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறார். முதல் டெஸ்டில் ஷான் மசூத் மற்றும் பாபர் அசாமை அடுத்தடுத்த ஓவரில் வெளியேற்றினார். இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தத் தொடரில் இவரிடமிருந்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வந்தது. நல்ல உயரமும் இருக்கின்ற காரணத்தினால் பவுன்ஸ் மிக நன்றாக கிடைக்கிறது. அதே சமயத்தில் பந்தை அடித்து வீசுவதோடு நெருக்கமாகவும் சிறப்பாக வீசுகிறார். இதனால் பங்களாதேஷ் கிரிக்கெட்டில் திடீரென கவனம் ஈர்த்தவர் ஆக இருக்கிறார்.
வேகம் எல்லாம் தானா வரும்
இந்திய தொடர் குறித்து நாகித் ராணா கூறும் பொழுது ” வெளிப்படையாக இந்திய தொடருக்கு மிக நன்றாக தயாராகி விட்டோம். நாங்கள் எந்த அளவிற்கு அதிகமாக தயாராகிறோமோ அந்த அளவிற்கு அதிகமாக சிறப்பாக செயல்பட முடியும். இந்திய அணி நல்ல அணி. அதே சமயத்தில் குறிப்பிட்ட நாளில் யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசமோ அல்லது அதை தாண்டி செல்லவோ நான் முயற்சிகள் செய்து கொண்டிருப்பதில்லை. நான் அணிக்கு என்ன தேவையோ அணியும் திட்டப்படி விளையாடவே முயற்சி செய்கிறேன். வேகம் என்பது ரிதம் சம்பந்தப்பட்டது. அது போட்டியில் ரிதம் நன்றாக இருக்கும் பொழுது தானாகவே அமையும்.
இதையும் படிங்க : WTC 10 டெஸ்ட் 85%.. ஆஸ்திரேலியா என்ன செஞ்சாலும் ஒரு விஷயத்தை செய்ய முடியாது – ஆகாஷ் சோப்ரா உறுதி
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட்டது என்னுடைய கிராமத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் என்னுடைய முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது கிடையாது. நான் சொந்த அடையாளத்தை உருவாக்கி பங்களாதேஷின் நாகித் ராணாவாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.