“பாபர் அசாம் கேப்டனா இருக்க தகுதி இல்லாதவர்.. உடனே வெளியே போகனும்!” – சோயப் மாலிக் போர்க்கொடி!

0
7335
Babar

பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது!

பாகிஸ்தான் அணி கடந்த ஒன்றரை மாதங்களில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. உலகக் கிரிக்கெட்டில் வேறு எந்த அணிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்று கூறலாம்.

- Advertisement -

காரணம் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அணி கட்டாயம் அரையிறுதிக்கு உலகக்கோப்பையில் தகுதி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டும் இல்லாமல் பலரும் கூறி வந்தார்கள்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டிங் துறையில் மூன்று வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் பத்து இடத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது.

மேலும் ஒரு போட்டிக்கு களம் இறக்கப்படும் பாகிஸ்தான் அணியின் 11 வீரர்கள் யார் என்கின்ற தெளிவு இருந்தது. இதன் காரணமாக ஒவ்வொரு வீரருக்கும் என்ன ரோல் என்பதும் தெளிவாக இருந்தது.

- Advertisement -

இதனால் பாகிஸ்தான் அணி கட்டாயம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு செல்லும் என்று பல நாட்டு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தார்கள். மேலும் ஒரு சிறிய அளவில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியே பலமாக இருக்கிறது என்றும் கூறினார்கள்.

ஆசியக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பலவீனங்களும் வெளியே தெரிய ஆரம்பித்தது. அவர்கள் பெரும்பாலும் தங்களது உள்நாட்டிலேயே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மேலும் அங்கு சுற்றுப்பயணம் செய்தவர்களில், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெரும்பாலும் இரண்டாம் தர அணிகளையே விளையாட வைத்தார்கள். இதை மிஸ்பா சுட்டிக்காட்டி பேசியும் இருந்தார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாலும், இந்தியாவுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் படுதோல்வியை சந்தித்து இருப்பதாலும், பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் கடுமையான விமர்சனத்தை கேப்டன் பாபர் அசாம் மீது வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நான் கடந்த காலங்களிலும் கூறியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அவர் கேப்டனாக அவுட் ஆப் பாக்ஸ் என்று நான் கூறவில்லை. அவர் கேப்டனாக இருக்கிறார் ஆனால் அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவரால் அற்புதங்களைச் செய்ய முடியும் ஆனால் கேப்டனாக கிடையாது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக!” என்று கூறியிருக்கிறார்!