நடக்க போற டெஸ்ட் சீரிஸ்ல.. எங்களுக்கு பெரிய சவாலா இந்த ஒரு இந்திய வீரர் இருப்பார் – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

0
87
Smith

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் மோதிக் கொள்ள இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இந்திய வீரரை எதிர்கொள்வது ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இறுதியாக 1990-91ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெற்று இருந்தது. அதற்குப் பிறகு இந்த முறை நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் மாஸ்டர் மூவ்ஸ்

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு நல்ல போட்டி பயிற்சிக்காக பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுமாறு இந்திய அணி அட்டவணையை அமைத்திருக்கிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா தொடருக்கு கூட்டிச் செல்வதற்கு தகுதியான வீரர்களை வைத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆரம்பித்திருக்கிறது. மேலும் முகமது ஷமியை சரியான நேரத்தில் உள்ளே கொண்டு வர காத்திருக்கிறது. இத்துடன் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியாவையும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சேர்ப்பதற்கான ரகசிய வேலைகள் நடப்பது போல் தெரிகிறது.

- Advertisement -

இவர் ஒருவர் பெரிய சவாலாக இருப்பார்

இந்த நிலையில் இந்த தொடரில் பும்ரா குறித்து பேசி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் “பும்ரா ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். அவர் புதிய பந்து, கொஞ்சம் பழைய பந்து மற்றும் பழைய பந்து என எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட முடிந்தவராக இருக்கிறார். ஒரு சிறந்த பந்துவீச்சாளராக அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் திகழ்கிறார். இதன் காரணமாக இவர் எதிர்த்து விளையாடுவது என்பது எப்பொழுதும் எல்லோருக்குமே சவாலானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி பையா அதை கேட்டப்ப.. என்கிட்ட பதிலே இல்ல.. அடுத்துதான் இது நடந்தது – ஆகாஷ் தீப் வெளியிட்ட தகவல்

இந்த நிலையில் பும்ரா பற்றி ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “உலக கிரிக்கெட்டில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பல்வகை திறன்களை பெற்றுள்ள சிறந்த பந்துவீச்சாளர் என நான் பும்ராவை தொடர்ந்து சொல்லி வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பாக அவருக்கு காயம் ஏற்பட்ட பொழுது அவர் மீண்டும் பழைய முறையில் திரும்பி வருவாரா? என்கின்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அவர் உண்மையில் மிகச் சிறப்பாக திரும்பி வந்து இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -