இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணிகள் இடம்பெற்று ஆஸ்திரேலியா வரவிருக்கும் ஜெய்ஸ்வாலை களத்தில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மூன்று வடிவத்திற்கும் நட்சத்திர வீரராக சுப்மன் கில்லை முன்னிறுத்தினாலும் கூட, முதல்முறையாக இந்திய கிரிக்கெட்டில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் முதல் நிலை நட்சத்திர வீரராக வருவதற்கு ஜெய்ஸ்வாலுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.
ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் பெரிய சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 700 க்கும் மேற்பட்ட ரன்கள் குறித்து பிரமிக்க வைத்தார். அதில் இரண்டு இரட்டை சதங்களும் அடக்கம்.
இதுவரையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் மொத்தம் 16 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி 1028 ரன்கள் குவித்திருக்கிறார். அவர் எப்பொழுது சதம் அடித்தாலும் அதை பெரிய சதமாக மாற்றக்கூடியவராக இருக்கிறார். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அவர் அரை சதங்களை விட அதிக சதங்களையே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களையும் கடந்த டெஸ்ட் தொடரில் மிரள விட்டார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் கூறும் பொழுது “நான் இதுவரை ஜெய்ஸ்வாலை சந்திக்கவில்லை. ஆனால் நிச்சயம் அவர் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சவாலாக இருக்கப் போகிறார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதை நான் மிகவும் உன்னிப்பாகப் பார்த்தேன். மேலும் அந்தத் தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய சுழல் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி இடம் இதுகுறித்து நான் பேசியிருக்கிறேன்.
இதையும் படிங்க : டிவில்லியர்ஸ் தோனியில் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்.?.. கோலி அசத்தல் பதில்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
நான் எப்பொழுதும் கிரிக்கெட்டை பற்றி கலந்து பேச விரும்புகிறேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒருவருடன் நான் பேசினால், நான் அதிலிருந்து புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள முடியும். இந்த விளையாட்டைச் சுற்றிலும் நிறைய அறிவுபூர்வமானவர்கள் இருக்கிறார்கள். நாம் அதை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.