இந்திய அணியின் நட்சத்திர ஜாம்பவான் வீரரான விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்து பதினாறு ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியராக விராட் கோலி இருக்கிறார்.
இந்த நிலையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
நவீன கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக திகழும் விராட் கோலி 2008ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியில் அடியெடுத்து வைத்தார். அன்று முதல் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்த வீரர் பல்வேறு சாதனைகளை படைக்கப் போகிறார் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். 19 வயதில் அடியெடுத்து வைத்து இன்று அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார்.
பதினாறு ஆண்டுகள் நிறைவு செய்யும் வகையில் விராட் கோலி இடம் 16 கேள்விகள் ரேபிட் ஃபயர் ரவுண்டு மூலம் கேட்கப்பட்டது. அதில் தனக்கு பிடித்த பேவரிட் ஷாட் மற்றும் பிடித்த பேவரிட் கிரிக்கெட்டர் என பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்திருக்கிறார். இதில் குறிப்பாக பேவரிட் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கப்பட்டு அதில் மகேந்திர சிங் தோனியா? அல்லது டிவில்லியர்சா? என இரண்டு ஆப்ஷன்கள் கேட்கப்பட கோலி தயங்காமல் இருவரையும் தேர்வு செய்தார்.
இதில் தனக்குப் பிடித்த ஷாட் கவர் டிரைவ் என்றும், தனக்கு பிடித்த ஃபேவரிட் பிளேயர்களாக தோனி மற்றும் டிவில்லியர்ஸ் என இருவரையும் தேர்வு செய்தார்.மேலும் இந்தியாவில் ஃபேவரிட் மைதானமாக பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தை தேர்வு செய்தார்.
நகைச்சுவையான கிரிக்கெட் வீரர் கெயில் எனவும், டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை மாநிலம் தனது இரண்டாவது சொந்த மைதானமாக தேர்வு செய்து இருக்கிறார். மேலும் தனக்கு பிடித்த பாடல் மற்றும் சுய விவரங்கள் குறித்த கேள்விகளுக்கும் விறுவிறுப்பான பதில்களை அளித்திருக்கிறார். தற்போது டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தொடர்ந்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:200 ரன்.. கடைசி பந்தில் வெற்றி.. டிராவிட் மகன் அதிரடி வீண்.. ஸ்மரன் சதத்தால் தப்பித்த படிக்கல் அணி.. மகாராஜா டி20
தனக்குப் பிடித்த ஃபேவரைட் வீரர் என இரண்டு வீரர்களையும் கோலி தேர்வு செய்தது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் விராட் கோலியின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் மகேந்திர சிங் தோனி விராட் கோலியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்திருக்கிறார். எனவே இவர்கள் இருவரையும் விட்டுக் கொடுக்காமல் ஒரே மாதிரியாக தேர்வு செய்து இருக்கிறார்.