அந்த ஒரு நாள்.. என் கிரிக்கெட் வாழ்வில் ஆறாத வடுவாக இருக்கும்.. டேவிட் வார்னர் பேட்டி

0
668

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. லீக் சுற்றில் நடைபெற்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது அடுத்த சுற்றில் விளையாட தயாராகி வருகிறது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை யோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறப் போகிற டேவிட் வார்னர், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் தான் படைத்தாலும், அந்த ஒரு நிகழ்வு தனது வாழ்வில் மையப் புள்ளியாக இருக்கும் என்றும், அதனை கடக்க தான் செய்த முயற்சிகளுக்காக மக்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் டேவிட் வார்னர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 18000 ரன்களுக்கும் அதிகமாக குவித்திருக்கும் டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். ஜனவரி 2024ஆம் ஆண்டு 49 சர்வதேச சதங்களை குவித்ததன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே மூன்று உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த வார்னர், இந்த டி20 உலகக் கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறப் போகிறார்.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆஸ்திரேலியவின் மூன்றாவது டெஸ்டின் போது உப்பு காகிதத்தை வைத்து பந்தை வார்னர் தேய்த்த சம்பவம், அவரது கிரிக்கெட் வாழ்வின் ஒரு கருப்பு புள்ளியாக அமைந்தது. இதன் விளைவாக அவரைத் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிது மட்டுமல்லாமல், ஒரு வருட தடைக்காலமும் ஆஸ்திரேலியா நிர்வாகம் விதித்தது. அதிலிருந்து மீண்டு வந்த வார்னர் சிறப்பாக விளையாடி தன் மீது ஏற்பட்ட கலங்கத்தை வெகுவாகவே குறைத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் டி20 கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் வார்னர், தனது கிரிக்கெட் வாழ்வு குறித்தும், அந்த நிகழ்வு குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து வார்னர் விரிவாக கூறும்பொழுது “நான் ஓய்வு பெற்ற பிறகு இனி எதிர்வரும் ஆண்டுகளில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மக்கள் திரும்பிப் பார்க்கும்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் காகிதத்தை வைத்து பந்தை தேய்த்த சம்பவம் ஒரு மைய புள்ளியாக இருக்கும்.

இருப்பினும் எனது கிரிக்கெட் ரசிகர்களும், ஆதரவாளர்களும் அந்த நிகழ்வை மாற்றுவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அந்த சர்ச்சையில் எனக்கு முன் வந்த ஜாம்பவான்களை எடுத்துக்காட்டாக கொண்டு அந்த நிகழ்வை மாற்ற தீவிரமாக உழைத்தேன். டி20 கிரிக்கெட் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரை ஒரு லட்சியத்தை நோக்கி எனது பயணம் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா அந்த 5% தப்பை செய்யாதிங்க.. அமெரிக்கா இந்த மாதிரி வந்தா உங்கள முடிச்சுடும் – ரிக்கி பாண்டிங் பேச்சு

இருப்பினும் 2018ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு வருந்தத்தக்க சம்பவமாக இருந்திருக்கிறது.இருப்பினும் அந்த நிகழ்வினை மாற்ற நான் எடுத்த முயற்சிகளுக்காக மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” என்று டேவிட் வார்னர் கூறி இருக்கிறார்.

- Advertisement -