ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கேமரூன் கிரீன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களம் இறங்கி விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் மற்றொரு பெங்களூர் வீரரான விராட் கோலி உடன் விளையாடிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த சீசனில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எழுச்சி என்பது அனைவரும் அறிந்த விஷயம். முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தாலும், அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
குறிப்பாக இரண்டாம் பாதியில் பெங்களூர் அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளும் சிறப்பாக இருந்த நிலையில் பெங்களூர் அணியில் விளையாடிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் பெங்களூர் அணியில் விளையாடிய விதம் குறித்தும் விராட் கோலி உடன் விளையாடிய அனுபவம் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து கிரீன் விரிவாக கூறும்போது “ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு மனிதர் அந்த கியரை மாற்றி அமைத்து முதல் பந்தில் இருந்தே பவுலர்களை டேக் ஆன் செய்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். பின்னர் அது நம்ப முடியாத நிகழ்வாக அமைந்ததோடு இறுதியில் அபாரமான தொடராக அமைந்தது.
விராட் கோலி எவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் என்பதை பார்ப்பதற்கே கடினமாக இருக்கும். நாமும் அவரைப் போல இருக்க வேண்டும் என்கிற மனநிலையை கொண்டு வரும். அவர் எல்லா சூழ்நிலைகளையும் எளிதாக்குகிறார். அவரிடம் சில கேள்விகள் நான் கேட்டுள்ளேன். அதே சமயத்தில் சைஸ் வாரியாக விராட் கோலி எனக்கு சற்று வித்தியாசமானவர். ஆடுகளத்தில் அவர் விளையாடும் விதம் போன்று என்னால் விளையாட முடியாது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:பாகிஸ்தானின் தோல்வி.. அறிவியல் பரீட்சைக்கு படிச்சிட்டு கணக்கு பாடம் எழுதுகிற கதை – ஷான் மசூத் வருத்தம்
அந்த சீசனில் 15 இன்னிங்ஸ்கள் விளையாடிய விராட் கோலி 61.75 பேட்டிங் சராசரியோடு 154.69 ஸ்ட்ரைக் ரைட்டில் 741 ரன்கள் குவித்து இருக்கிறார். கடந்த சீசனில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களோடு அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும் பெற்றார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரர் இரண்டாவது முறையாக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.