பாகிஸ்தானின் தோல்வி.. அறிவியல் பரீட்சைக்கு படிச்சிட்டு கணக்கு பாடம் எழுதுகிற கதை – ஷான் மசூத் வருத்தம்

0
218

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் ஷான் மசூத் அறிவியல் பரீட்சைக்கு படித்துவிட்டு கணக்குப் பரீட்சை எழுதக்கூடாது என அதற்கான விளக்கத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அதிக அளவிலான விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். காரணம் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் வங்கதேசம் முன்னணி அணியாக கருதப்படும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் பதிலடி கொடுக்கும் என்றே அனைவரும் எண்ணினார்கள்.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணியின் கை ஓங்கி இருந்தது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இதற்கு பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அனுபவம் இல்லாத வீரர்கள் இல்லாததே காரணம் என்று தற்போதைய டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பங்களாதேஷ் அணியில் 70 முதல் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஷகீப், முஷ்பிகுர் ரகுமான் மற்றும் லிட்டன் தாஸ் அனுபவம் வாய்ந்த வீரர்கள். எங்களுக்கும் அதே அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் நிச்சயம் தேவை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் இறுதி வடிவம். எனவே அதற்கு நிச்சயமாக அனுபவம் தேவைப்படுகிறது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அனுபவம் தேவை என்பதை உணர்த்துகிறது.

நீங்கள் எந்த வடிவத்தில் கிரிக்கெட் தொடரை விளையாடுகிறீர்களோ அதற்கு தகுந்தவாறு தான் வீரர்களை உருவாக்குவீர்கள். அதிக டி20 தொடர்களில் விளையாடிவிட்டு டெஸ்ட் வீரர்களை பெற முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால் அறிவியல் தேர்வுக்கு தயாராகிவிட்டு கணித தேர்வுக்கு உட்காருகிற கதை தான். நீங்கள் கணிதத்திற்காக சோதிக்கப்படுகிறீர்கள் என்றால் கணிதத்தை படிக்க வேண்டும். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு தகுந்தவாறு போட்டிகளை விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ஒரே தொடரில்.. ஒரே நேரத்தில்.. 2 செமி பைனல்களில் ஆடும்.. 2 தமிழ்நாடு அணிகள்.. சாய் கிஷோர் அணி பின்னடைவு

இதன் மூலமாக பாகிஸ்தான் கேப்டன் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகள் அணிக்கு இன்னும் தேவை என்று கூறியிருக்கிறார். வங்கதேச அணி அடுத்ததாக வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -