எங்ககிட்ட 2 பேர் இருக்காங்க.. ஆனா இதை ஆரம்பிச்ச ரிஷப் பண்ட்டை சைலன்ட் பண்ணனும் – பேட் கம்மின்ஸ் பேச்சு

0
657
Cummins

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய வீரர் ரிஷப் பண்ட் குறித்து முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தன்னுடைய வழக்கமான அதிரடியான ஆட்டத்தின் மூலம் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். மேலும் 2022 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கியதற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மாறிவரும் டெஸ்ட் பேட்டிங் அணுகுமுறை

டி20 கிரிக்கெட்டின் தாக்கம் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். பிறகு சனத் ஜெயசூர்யா அதை கையில் எடுத்தார். அதற்குப் பிறகு இந்திய அணியின் வீரேந்திர சேவாக் அதிரடி வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இருந்தார். இவர்களை தொடர்ந்து பிரண்டன் மெக்கலம் வந்தார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களையும் ஆடக்கூடியவராக முதன் முதலில் வெளிப்பட்டவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். அவர் அச்சமற்ற முறையில் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகும் முறைக்கு பிள்ளையார் சுழி போட்டவராக ரிஷப் பண்ட் இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆரம்பித்து வைத்தார்

இது குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது ” ஒவ்வொரு அணியும் எடுத்துக் கொண்டால் அதிரடியாக விளையாடக்கூடிய ஒன்று இரண்டு வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். எங்களிடம் எடுத்துக் கொண்டால் ஹெட் மற்றும் மார்ஸ் இருவரும் இருக்கிறார்கள்”

“இவர்கள் அதிரடியாகத்தான் விளையாடுவார்கள். பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் தவறு செய்தாலும் அவர்கள் அணுகு முறையில் அதை தண்டிப்பார்கள். மேலும் ரிஷப் பண்ட் போல நம்ப முடியாத வகையில் சில ஷாட்டையும் எடுத்துக் கொண்டு அவர்கள் வரலாம்”

இதையும் படிங்க : நடக்க போற டெஸ்ட் சீரிஸ்ல.. எங்களுக்கு பெரிய சவாலா இந்த ஒரு இந்திய வீரர் இருப்பார் – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

“இப்பொழுதெல்லாம் ரிஷப் பண்ட் போல வித்தியாசமான ஷாட் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது அதிகரித்துவிட்டதால் நாம் அதற்கு பழகிவிட்டோம் என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட் இப்படியான விஷயங்களை ஆரம்பித்து வைத்தவர் ஆக இருக்கிறார். ஒன்று இரண்டு டெஸ்ட் தொடர்களில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி இருக்கிறார். எனவே அவரை அமைதியாக இருக்க வைக்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -