பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் விராட் கோலி ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு மிகவும் வருத்தப்பட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக் கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர். அணியின் நட்சத்திர வீரரான அவரே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என பயிற்சியாளர் கம்பீரே தெரிவித்திருந்தார்.
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்
இந்த நிலையில் மண்ணின் மைந்தனான ரவிச்சந்திரன் அஸ்வின் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னையில் வைத்து முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் எடுத்து அணி என் வெற்றிக்கு பெரிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த நிலையில் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து போட்டியை பார்த்ததோடு, கடைசியாக விருது வழங்கும் நிகழ்வு முடியும் வரை கலைந்து செல்லாமல் மைதானத்தில் இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். இதைப் பார்ப்பதற்கு அருமையான காட்சியாக அமைந்திருந்தது. இந்த நிலையில் முதல் நாள் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் நிலையில் விராட் கோலி குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்கு வருத்தப்பட்டு இருக்கிறார்.
விராட் கோலி வருத்தப்பட்டார்
இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நாங்கள் முதல் டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு வந்து மைதானத்தில் இருந்த பொழுது ரசிகர்கள் இல்லாமல் மைதானம் காலியாக இருந்தது. இதைப் பார்த்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இப்படி ரசிகர்களே வரவில்லையே, ஆதரவு இவ்வளவு குறைவாக இருக்கிறதே என மிகவும் வருத்தப்பட்டார்”
இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெருமையை மீட்ட.. இந்த 3 மாற்றத்தை செய்யணும் – கேரி கிரிஸ்டன் கோரிக்கை
“இப்படியான நிலையில்தான் மதியம் செல்ல செல்ல ரசிகர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம் மைதானத்தில் பெரும் பகுதியை நிரப்பியது. மேலும் போட்டி முடியும் நான்கு நாட்கள் வரையில் கூட்டம் தொடர்ந்தது. அத்தோடு போட்டி முடிந்து விருது வழங்கும் நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்து ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு விராட் கோலி மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியிருக்கிறார்.