147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. அஸ்வின் படைத்த பிரம்மாண்ட சாதனை.. சென்னை சேப்பாக்கத்தில் ரெக்கார்டு

0
1206
Ashwin

தற்போது இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் 147 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருக்கிறார்.

நேற்று நான்காவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். பங்களாதேஷ் அணி மொத்தமாக நேற்று நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் கேப்டன் நஜ்முல் சாந்தோ மற்றும் ஷாகிப் அல்ஹசன் இருவரும் களத்தில் நின்றார்கள்.

- Advertisement -

ரோகித் வித்தியாசமான முடிவு

இந்த நிலையில் இன்று இருவரும் தொடர்ந்து நான்காவது நாளில் விளையாட வந்தார்கள். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் வைத்து ஆரம்பித்தார். இதன் காரணமாக முதல் ஒரு மணி நேரம் விக்கெட்டுகள் எதுவும் விழவில்லை.

இதற்கு அடுத்து ஒரு மணி நேரம் தாண்டியதும் கூல் ட்ரிங்ஸ் இடைவேளைக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். அஸ்வின் உள்ளே வந்து வீசிய முதல் ஓவரிலேயே ஷாகிப் அல் ஹசனை வெளியேற்றி அசத்தினார். அங்கிருந்து கொத்து கொத்தாக பங்களாதேஷ் விக்கெட்டுகளை விட ஆரம்பித்தது.

- Advertisement -

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு

இதற்கு அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் மெகதி ஹசன் விக்கெட்டை ஐந்தாவது விக்கெட்டாக கைப்பற்றினார். இது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாபெரும் உலக சாதனை படைப்பதற்கு காரணமாக அமைந்தது.

இதுவரையில் ஒரே மைதானத்தில் எந்த வீரரும் ஒரே டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் சதம் இரண்டு முறை அடித்தது கிடையாது. ரவிச்சந்திரன் அஸ்வின் இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கில் சதமும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க : டெஸ்டில் தோனி ரிஷப் பண்ட் யார் சிறந்தவர்?.. அவர அப்படி சொல்லாதிங்க – தினேஷ் கார்த்திக் திட்ட வட்டம்

இதைத்தொடர்ந்து தனது சொந்த மைதானத்தில் சொந்த மக்கள் முன்னால் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருக்கிறார்.

- Advertisement -