நண்பன் ரோகித் ஐபிஎல் வேற டீம்க்கு போறாரா.. பணத்துக்காக தலைவலியை வாங்குவாரா? – அஸ்வின் பதில்

0
846
Ashwin

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடாமல் ரோகித் சர்மா வேறு அணிக்கு சென்று விளையாடுவாரா என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து கூறியிருக்கிறார்.

தற்போது எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? என்பது பரபரப்பான விவாதமாக இருக்கும் அதேவேளையில், ரோகித் சர்மா தன்னுடைய அணியாணம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர்ந்து விளையாடுவாரா? என்பதும் முக்கியமான விவாதமாக இருந்து வருகிறது.

- Advertisement -

சினிமா போல மாறிய காட்சிகள்

ரோகித் சர்மாவுக்கு ஐபிஎல் தொடர் மிகவும் சுமாரான ஒன்றாகவே நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனை கொண்டு வந்து தங்களை புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்து, ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி புதிய கேப்டனாக நியமித்தார்கள்.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிகரமான வீரராகவும் கேப்டனாகவும் இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதைச் செய்ய முடியவில்லை. அதே சமயத்தில் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்து ரோகித் சர்மா இந்த முறை உலகக்கோப்பையை வென்று விட்டார். மேலும் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதனால் அவரால் ஒரு அணிக்கு கிடைக்கும் சந்தை மதிப்பு பெரிய அளவில் மாறுகிறது.

- Advertisement -

பணத்தால் தலைவலியா இல்லை நிம்மதியா?

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை தொடர்வதா? ரோகித் சர்மாவை தொடர்வதா? இல்லை அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றால் இருவரையுமே அணியில் வைத்துக் கொள்வதா? ரோகித் இதற்கு சம்மதிப்பாரா? என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு பெரிய நெருக்கடியான நிலை உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தனக்கு பதில் கோச்சான மோர்கல்.. மௌனம் கலைத்த ஜாகீர் கான்.. இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி

தற்போது இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ரோகித் சர்மா தனக்கு எந்த தலைவலியும் வேண்டாம், நீண்ட நாட்கள் கேப்டனாக இருந்து கோப்பைகளையும் வென்று விட்டேன், தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரராக சந்தோசமாக விளையாடுகிறேன் இன்று முடிவெடுத்தால் அதில் தவறே கிடையாது. ஒரு கட்டத்திற்கு மேல் வீரர்கள் மகிழ்ச்சியான அணியில் விளையாட நினைக்கிறார்கள். அவர்களுக்கு அந்தக் கட்டத்தில் பணம் பெரிதான விஷயமாக இருப்பதில்லை. ரோகித் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடரலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -