வீடியோ: பவுலிங் போடும் கையில் நாய் கடி.. லக்னோ அணியுடன் நடக்கும் போட்டியில் விளையாட காத்திருந்த குட்டி டெண்டுல்கருக்கு நேர்ந்த சோகம்! என்ன நடந்தது? – வெளியான ரிப்போர்ட்!

0
280

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் அர்ஜுன் டெண்டுல்கர் கையில் நாய் கடித்துள்ளது என்று அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 13ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. லக்னோ அணி 12 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற இரு அணிகளுக்கும் இந்த லீக் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்போட்டியில் தோல்வி அடையும் அணியின் பிளே-ஆப் சூற்றுக்கான வாய்ப்பு சிக்கலாகிவிடும். மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக அறிமுகமாகினார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகள் எடுத்து மற்றும் 13 ரன்கள் அடித்திருக்கிறார். இன்று நடைபெற்று வரும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இடம்பெறவில்லை.

இதற்கான காரணம் என்னவென்று, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் அர்ஜுன் டெண்டுல்கர் சில லக்னோ வீரர்களுடன் பேசிய போது தெரியவந்துள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் அவர் பந்து வீசும் கையில் நாய் கடித்துள்ளது. இதனால் சிறிய அளவில் காயம் மற்றும் எரிச்சல் இருப்பதாக அவரெ கூறினார்.

- Advertisement -