அர்ஸ்தீப் சிங் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் மூலம் வீழ்த்தி அசத்தல்!

0
2522
Arsdeepsingh

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இந்த தொடருக்கு இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உடனான டி20 தொடரில் ஓய்வில் இருந்த அர்ஸ்தீப் சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவது என்று தீர்மானித்தார். இந்திய அணியில் சாகல் நீக்கப்பட்டு அஸ்வின் உள்ளே வந்திருக்கிறார். மேலும் பும்ராவுக்கு பதிலாக தீபக் சாகர், ஹர்திக் பாண்டியா இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்தப் போட்டி தொடங்கியதும் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமாவை தீபக் சஹர் கிளீன் போல்ட் செய்தார்.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு மிகப் பெரிய அடி விழுந்தது. அடுத்த ஓவரை அர்ஸ்தீப் வீச, அந்த ஓவரின் முதல் பந்தில் குயின்டன் டி காக், ஐந்தாவது பந்தில் ரூசோ, ஆறாவது பந்தில் டேவிட் மில்லர் என மூன்று பேரும் கிளீன் போல்டாகி வெளியேறினார்கள். இதையடுத்து தென்ஆப்பிரிக்கா அணி 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் தவிக்கிறது. இளம் இடத்தை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் ஆட்டத்தில் தனது முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் மூலம் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது எய்டன் மார்க்ரம், பார்னல் இணைந்து விளையாடி வருகிறார்கள். பந்து காற்றில் திரும்ப இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு வேடிக்கை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்!