நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் குறித்து அம்பதி ராயுடு பாராட்டி பேசி இருக்கிறார்.
நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நெருக்கடியில் இருந்த பொழுது சூரியகுமார் யாதவ் அணியைக் காப்பாற்றியதோடு, அதிரடியிலும் சமரசம் செய்யாமல் விளையாடி அரை சதம் அடித்தார்.
அடுத்து இந்திய பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய தூணாக இருந்தார். இவர்கள் இருவரும் நேற்றைய போட்டியில்ஏற்படுத்திய தாக்கம் சிறப்பாக இருந்தது.
இதுகுறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும்பொழுது “சூரியகுமார் முற்றிலும் கிளினிக்கலாக இருந்தார். ஒவ்வொரு பேட்டருக்கும், இந்த விளையாட்டை விளையாடும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும், வேகமே இல்லாத ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று பாடம் நடத்தினார்.
சூரியகுமார் தனது கால்களை பயன்படுத்தினார், கிரீசை பயன்படுத்தினார். அவருடைய ஹிட்டிங் ஜோனை பாருங்கள். இரண்டு மீட்டருக்கு முன்பாக பந்தை சந்தித்து விளையாடுகிற இருந்தார்.அவர் உலகின் சிறந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக கோணத்தை ஏற்படுத்தி அழகாக விளையாடினார். இந்த நிலையில் எடுத்துக் கொண்டால் யாரையும் விட சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
இதையும் படிங்க : 2 உலகக்கோப்பைகள் அல்ல.. என்னால் மறக்க முடியாதது அந்த 643 நிமிடங்கள்தான்- கவுதம் கம்பீர் பேட்டி
வழக்கம்போல் பும்ரா இருந்த கண்டிஷனை மாற்றி சாதகமாக அமைத்துக் கொண்ட விதம், அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். மேலும் அவர் இந்திய அணிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கடவுள் தந்த பரிசு” என்று கூறி இருக்கிறார்.