ரோகித் சர்மாவை பற்றி நான் தவறாக கூறினேனா? சிஎஸ்கே துஷார் தேஷ் பாண்டே விளக்கம்!

0
141
Tushar

இந்த வருட ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஐபிஎல் தொடரின் அரசர்களான மும்பை மற்றும் சென்னை அணிகள் மும்பையில் மோதிய போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த போட்டியை போல் இல்லாமல் ஒரு அளவுக்கு நல்ல துவக்கத்தையே தந்தார். 12 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தார். துவக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பும் 40 ரன்கள் 4 ஓவர்களுக்கு தொட்டது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை அணியின் இளம் வேகபந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஒரு அற்புதமான பந்தின் மூலம் ரோகித் சர்மா விக்கெட்டை அபாரமாக வீழ்த்தினார். அவர் மும்பை பேட்டிங் யூனிட்டில் ஏற்படுத்திய இந்த ஓட்டை, ஒட்டுமொத்தமாக மும்பை பேட்டிங் யூனிட் சரிவதற்கு காரணமாக அமைந்தது.

போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மாவை வீழ்த்திய துஷாரின் பந்தைக் குறிப்பிட்டு பேசி பாராட்டினார். மேலும் உள்நாட்டு சீசனில் சிறப்பாக இருந்திருக்கிறார் எனவே அவருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது குறித்தும் பேசி இருந்தார்.

போட்டி முடிந்த மறுநாள் சமூக வலைதளங்களில் துஷார் ரோஹித் சர்மாவின் விக்கட்டை கைப்பற்றுவது கடினம் கிடையாது மிக எளிதான ஒன்றுதான், அவர் விராட் கோலி, ஏபிடி போல பெரிய பேட்ஸ்மேன் கிடையாது என்று கூறியதாகச் செய்திகள் நிறைய காணப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது மறுப்பை பதிவு செய்துள்ள அவர் அதில் ” மேலே காணப்பட்டதில் உள்ள எல்லா லெஜன்ட் வீரர்களின் மீதும் எனக்கு முழுமையான மரியாதை உண்டு. இது போன்ற கீழ்த்தரமான கருத்தை நான் வெளியிடவில்லை. வெளியிடவும் மாட்டேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்!” என்று காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.

சமூக வலைதளத்தில் இவரது பெயரில் இப்படியான அவதூறு செய்தி பரவிய பொழுது அது போலியானது என்று சிலர் மறுத்து இருந்தாலும், இதுகுறித்து தெளிவான பதில்கள் ஏதும் கிடைக்காத நிலையில், இதைப் பெரும்பாலானோர் நம்பி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகைய அவதூறுக்கு துஷார் சரியான பதிலடி தந்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!