இந்திய அணியில் வாய்ப்பு.. ஷமி தந்த அந்த ஐடியாதான் எல்லாத்தையும் மாத்துச்சு – ஆகாஷ் தீப் பேட்டி

0
152
Shami

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆகாஷ் தீப் பந்துவீச்சில் முகமது ஷமி தனக்குத் தந்த அறிவுரை மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்குகிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து தொடர்

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடியது. அதில் கடைசி போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு அறிமுகம் ஆகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கிடைத்த ஒரு வாய்ப்பில் தன்னுடைய பந்துவீச்சின் திறமையை காண்பித்து தேர்வாளர்களை கவர்ந்திருந்தார்.

இந்த நிலையில் முகமது ஷமி காயத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து கொண்டிருப்பதால் அவருடைய இடத்திற்கு ஆகாஷ் தீப் இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் தற்போது ஆரம்பித்திருக்கும் துலீப் டிராபியில் ஆகாஷ் தீப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு அற்புதமான பந்தங்களை வீசியிருந்தார்.

- Advertisement -

முகமது ஷமி அறிவுரை

தன்னுடைய பந்துவீச்சில் முகமது ஷமி தனக்கு கொடுத்த அறிவுரை பற்றி பேசி இருக்கும் ஆகாஷ் தீப் கூறும் பொழுது ” முதல் இன்னிங்ஸில் நிதீஷ்குமார் ரெட்டியை வெளியேற்றியது இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தரை வெளியேற்றியது எனக்கு மிகவும் பிடித்த விக்கெட். வாஷிங்டன் சுந்தருக்கு நான் வலைப்பயிற்சியில் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து நிறைய பந்துவீசி விட்டேன். இதனால் அவர் அதற்கு நன்றாக பழகிவிட்டார். ரொம்பவே அவருக்கு எதிராக புதிதாக ஏதாவது செய்ய நினைத்தேன்.

இடதுகை பேட்ஸ்மேனுக்கு ரவுண்டு த ஸ்டெம்பில் இருந்து பந்து வீசும் பொழுது பந்தின் பளபளப்பான பக்கம் எந்த பக்கம் இருக்கிறதோ பந்து அந்த பக்கமாக செல்கிறது. இதை முகமது ஷமி செய்து நான் பார்த்திருக்கிறேன். எனவே இது எப்படி செய்யலாம்? என நான் அவரிடம் கேட்டேன்.

இதையும் படிங்க : ரோகித் சர்மா சொல்றது புரிஞ்சாதானே பிரச்சனை.. சூர்யா கேட்ச் அப்ப இதுதான் நடந்தது – ரிஷப் பண்ட் பேச்சு

அதற்கு அவர் கூறும் பொழுது இதற்காக தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் செய்யக்கூடாது எனவும், தொடர்ந்து பந்து வீசிக் கொண்டே இருக்கும் பொழுது இது நமக்கு வந்து விடும் என்றும் கூறினார். மேலும் நாம் இதற்கு தனிப்பட்ட முறையில் நிறைய முயற்சிகள் செய்தால், பேட்ஸ்மேன்கள் நம்மை எளிதாக விளையாடுவதற்கு வசதியாக அமைந்து விடும் என்றும் கூறினார். என்னுடைய பந்துவீச்சில் அவர் தந்த இந்த அறிவுரை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -