இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தன்னுடைய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூரியகுமார் பிடித்த கேட்ச் பற்றி நிறைய பேசியிருக்கிறார்.
ரோகித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் ரிஷப் பண்ட் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருக்கும் பேட்டிங் திறனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, டி20 உலகக் கோப்பையில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தை கொடுத்தார். மேலும் நகைச்சுவையாக அணுகும் ரிஷப் பண்ட்டை பிடிக்கும் என்றும் கூறியிருப்பார்.
மூன்று வடிவ கம்பேக்
2022 ஆம் வருடம் இறுதியில் மோசமான சாலை விபத்தில் சிக்கி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிரிக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் திரும்பினார். அவரிடமிருந்து எதிர்பார்க்காத அளவுக்கு பேட்டிங் சிறப்பாக அமைந்து 400 ரன்களுக்கு மேல் வந்தது. அத்தோடு விக்கெட் கீப்பிங் செய்வது தான் கடினம் என்று நினைத்த பொழுது, அதை மிகச் சிறப்பான முறையில் செய்து அசத்தினார்.
இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் என இரண்டு வடிவத்தில் உடனுக்குடனே வாய்ப்பு பெற்றார். இந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்று இருக்கிறார். மார்ச் மாதம் ஆரம்பித்து ஏழு மாதத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு திரும்ப வந்துவிட்டார்.
ரோகித் சர்மா சொல்வது புரியாது
கேப்டன் ரோகித் சர்மா களத்தில் நகைச்சுவையாக விஷயங்களை அணுக கூடியவர். இதுகுறித்து பேசி உள்ள ரிஷப் பண்ட் கூறும் பொழுது “ரோகித் சர்மா பாய் மைதானத்தில் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவே செய்கிறது. இருந்தாலும் கூட மைதானத்திற்கு வெளியே அவர் என்ன பேசுகிறார் என்பது எனக்கு சரியாக புரிவதில்லை.
மேலும் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து உறுதியாக சிக்ஸருக்கு சென்று கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். எல்லாம் முடிந்தது என்பது போல இருந்தது. ஆனால் இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையால் அந்தப் பந்து எல்லைக்கோட்டை தாண்டவில்லை.
இதையும் படிங்க : ஷமி ஸ்ரேயாஸ் பட்டிதார்.. இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாத காரணம் என்ன.. வாய்ப்பு கிடைக்குமா?
கிரிக்கெட் வீரர்களுக்கு உலகக் கோப்பையை வெல்வது என்பது கனவு. நான் காயத்தில் இருந்து திரும்பி வந்த உடனேயே அது நடந்து விட்டது சிறப்பான உணர்வு. ஆனால் இந்திய மக்கள் அடுத்த 10 அல்லது 15 நாட்களில் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். எனவே நாம் அதிலேயே நின்று கொண்டிருக்காமல் தொடர்ந்து முன்னோக்கி சென்று சிறப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.