இந்திய டெஸ்ட் அணியில் ஆகாஷ் தீப் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்துக்கு முன்னேறிவிட்டார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். தற்போது இதை மறுத்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
முகமது ஷமிக்கு மாற்றுவீரரை கண்டறிய வேண்டிய அவசியம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கிறது. அதை நோக்கிய தேடலில் தற்பொழுது சீக்கிரமாகவே ஆகாஷ் தீப் கிடைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தினேஷ் கார்த்திக் இந்த கருத்தை கூறி இருக்கிறார்.
இப்போதைக்கு இந்த இடமே தர முடியும்
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஆகாஷ் தீப் ஒரு சிறந்த திறமைசாலி. நாம் அவர் கையில் பந்தை கொடுக்கும் பொழுது அவர் ஒருமுறை விக்கெட்டை எடுக்கும் பொழுதும் அவரது திறமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முகமது சிராஜும் இந்த வேலையை இங்கு செய்து வந்திருக்கிறார். இந்திய ஏ அணியில் ஆகாஷ் தீப் தனக்கான இடத்தை சம்பாதித்திருக்கிறார்”
“நான் இவ்வளவு சீக்கிரத்தில் முன்னேறி சென்று ஆகாஷ் தீப்பை இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் என்று கூறமாட்டேன். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் விமானத்தில் அவருக்கு நான்காவது வேகப்பந்துவீச்சாளர் என்ற இடத்தை கொடுக்கலாம்”
பழைய பந்தில் விக்கெட் இல்லை
மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் கூறும்பொழுது ” அவருடைய பெரும்பாலான விக்கெட்டுகள் புதிய பந்தில் வந்திருக்கின்றன. இப்படி நடக்கும் பொழுது வெளிப்படையாகவே எடுத்துக் கொண்டால் அடுத்து வந்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்திப் போன்ற சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : பங்களாதேஷ் டி20.. சிறப்பு முகாமில் 156 வேக மயங்க் யாதவ்.. பிசிசிஐ நபர் தகவல்.. காரணம் என்ன.?
“ஆமாம் அவர் பழைய பந்தில் இன்னும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. அதே சமயத்தில் இவை சீக்கிரத்தில் நடக்கக்கூடியதுதான். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் இதை செய்திருக்கிறார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றிய நிறைய விக்கெட்டுகள் பழைய மற்றும் அரை பழைய பந்தில் வந்திருக்கின்றன. எனவே இது ஒரு பிரச்சனை கிடையாது” என்று பொருள் இருக்கிறது.