இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி முதல் மூன்று டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு அடுத்ததாக நீண்ட டெஸ்ட் தொடர் இருப்பதால் மூத்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தேர்வுக் குழு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய மயங்க் யாதவ் குறித்து பிசிசிஐ ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது முன்னணி மூத்த பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள். இதில் சமி ஏற்கனவே காயம் காரணமாக பல மாதங்களாக இந்திய அணியில் விளையாடாமல் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரை குறிப்பிடத்தக்க தொடர்களுக்கு மட்டுமே பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போது இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் ஆர்வமாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகாஷ் தீப், ஆவேஸ் கான் போன்றோரை இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 156 கிலோமீட்டர் வேகத்தில் அசாதாரணமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்த மயங்க் யாதவை என்சிஏவில் உள்ள சிறப்பு முகாமில் சேர்த்து அவரது பந்துவீச்சை கண்காணித்து வருகிறது. மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவரை களம் இறக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறி இருக்கிறது.
இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறும் போது “மயங்க் யாதவ் கடந்த ஒரு மாத காலமாக காயம் குறித்து எந்த புகாரும் செய்யவில்லை. தேர்வாளர்கள் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்திய அணிக்கு நீண்ட டெஸ்ட் தொடர் வரவிருக்கும் நிலையில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு புதிய முகங்களை சோதித்து பார்க்கும் முயற்சியில் தேர்வாளர்கள் உள்ளனர்.
ஏறக்குறைய பாண்டியா இரண்டு மாதங்களாக விளையாடவில்லை. மேலும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கும் பயிற்சிகள் தேவைப்படுகிறது. மயாங்க் யாதவ் மூன்று தனி தனி ஸ்பெல்களாக 20 ஓவர்களுக்கு நெருக்கமாக ஒரே நாளில் வீசிக் கொண்டிருக்கிறார். எனவே என்சிஏவில் அவரை பார்த்த தேர்வாளர்கள் வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்வதற்கு வலுவான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க:24 விக்கெட்.. இந்திய அணியின் அந்த தொடருக்கு முன்.. நான் யாருன்னு காட்ட நெனச்சேன் – சாகல் பேட்டி
அவரை டி20 தொடரில் மட்டும் பந்து வீச தேர்வாளர்கள் விரும்பவில்லை. தேர்வாளர்கள் அவரது முன்னேற்றத்தை கவனமாக கண்காணிக்க விரும்புகிறார்கள். கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கல் ஆகியோர் மயங்க் யாதவை லக்னோ அணியிலிருந்து பார்த்து வருவதால் அவரை பெரிய வீரராக கருதுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.