கே எல் ராகுலுக்கு கம்பீர் செய்வது நியாயமே இல்லை.. அவரை இன்னும் என்னெல்லாம் பண்ண போறீங்க – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
300
Kl rahul and Aakash chopra

இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது.

இருப்பினும் கே எல் ராகுலின் பேட்டிங் ஆர்டர் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் ஷோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. அதில் மிடில் வரிசையில் களமிறங்கிய கேஎல் ராகுல் 52 பந்துகளில் 16 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு இந்திய அணி பாலோ ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் நான்கு விக்கெட் இழப்புக்கு 287 ரெண்டு குவித்து டிக்ளர் செய்தது.

கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்திருந்த நிலையில் ஆறாவது வரிசையில் களமிறங்கிய கேஎல் ராகுல் 19 பந்துகளில் நான்கு பவுண்டரிகளோடு 22 ரன்கள் குவித்து நல்ல நிலையில் தனது ஆட்டத்தை தொடர்ந்தார். இருப்பினும் மேற்கொண்டு இந்திய அணி ரன்கள் குவிக்காமல் டிக்ளர் என அறிவித்தது. இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் கே எல் ராகுலை பேட்டிங் செய்ய விடாமல் தடுத்தது ஏன் என்று கௌதம் கம்பீரிடம் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது “முதலில் கே எல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினீர்கள். பிறகு மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்ய அனுப்பினீர்கள். தற்போது லோயர் ஆர்டரில் அனுப்பி பேட்டிங் செய்ய வாய்ப்பு வந்த போது அவருக்கு போதிய அவகாசம் கொடுக்கவில்லை. டிக்ளர் என அறிவித்தபோது கே எல் ராகுல் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் அவர் என்னையும் சபா கரீமையும் போலத்தான் இருந்திருக்க வேண்டும்.

பாலோ ஆனை அறிவிக்கும் விருப்பம் இந்திய அணிக்கு இருந்தது. ஆனால் அப்படி செய்யாமல் பேட்ஸ்மேன்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக தொடர்ந்து விளையாடியது. எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு மிக நீண்ட டெஸ்ட் சீசன். கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல நிலையில் இருந்தார்.

இதையும் படிங்க:2-0 மோசமான தோல்வி.. கண்ணாடியை பார்த்து இந்த விஷயத்தை நாங்களே கேட்டுக்கணும் – டுமினி பேட்டி

தனது முயற்சியை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இந்தியா அதை தேர்வு செய்யவில்லை. முதல் ஐந்து பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் முக்கியமானது என்றால் ஆறாவது வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்டுக்கு ஏன் அந்த முக்கியத்துவம் தரவில்லை? என்று தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -