2-0 மோசமான தோல்வி.. கண்ணாடியை பார்த்து இந்த விஷயத்தை நாங்களே கேட்டுக்கணும் – டுமினி பேட்டி

0
112
Jp duminy

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தென் ஆப்பிரிக்க அணி மோசமான நிலைமையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் பயிற்சியாளர் ஜே பி டுமினி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே முதன்முறையாக இருதரப்பு ஒரு நாள் தொடர் நடைபெற்று வந்த நிலையில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி கட்டாயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதைவிட சிறப்பாக விளையாடி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா அணியை விட ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் ஆப்கானிஸ்தான் அணி சிறந்து விளங்குகிறது.இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்க அடியினர் கண்ணாடியை பார்த்து தங்களை எப்படி சரி செய்து கொள்வது என்று விவாதிக்க வேண்டும் என சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் விளையாடுகிறோம். சில சமயங்களில் வீரர்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியாத சூழ்நிலைகளில் தங்களை கண்டார்கள். எனவே இந்த சூழ்நிலையில் நாமே கண்ணாடியை திருப்பிக் கொண்டு எப்படி இதை சரி செய்யப் போகிறோம் என்று கேட்க வேண்டும்.

இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க முடியாது. இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து நாங்கள் மிகவும் கீழே இருக்கிறோம். தங்கள் இயக்கங்களில் சந்தேகத்திற்கு இடம் இன்றி இருக்கும்போது அங்கே ஏதேனும் ஒரு சூழ்நிலையில் காவலில் பிடிபடலாம் அப்போதுதான் நம்மை நாமே கண்டுபிடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:அம்பயர் கிட்ட போன் நம்பர் இருக்கும்.. பிளேயர் சாதகமா தீர்ப்பு வாங்கறாங்க – பாகிஸ்தான் பாகிம் அஷ்ரப் குற்றச்சாட்டு

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி இன்று மாலை 5.30 மணி அளவில் ஷார்ஜாவில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் ஆவது வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் தேடிக் கொள்ளுமா என்று எதிர்பார்க்கலாம். இதுவரை ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வந்த இரண்டு அணிகள் இதுவரை நடைபெற்ற ஐந்து ஆட்டங்களில் தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்று இருந்த நிலையில் தற்போது நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -