பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் குறித்து அஜய் ஜடேஜா மிகப்பெரிய அளவில் புகழ்ந்து பேசி இருக்கிறார். அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக மோசமான சாலை விபத்தில் சிக்கி மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதில் அவர் பேட்டிங் சிறப்பாக இருந்ததை விட அவருடைய விக்கெட் கீப்பிங் மிகச் சிறப்பாக இருந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக தற்பொழுது அவர் மூன்று வடிவிலான இந்திய அணியிலும் இடம் பிடித்து விட்டார்.
ரிஷப் பண்ட் நாக் பெஸ்ட்
இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறும் பொழுது “நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒரு பெஸ்ட் இன்னிங்ஸை தேர்ந்தெடுக்க சொன்னால் நான் ரிஷப் பண்ட் இன்னிங்ஸை தேர்வு செய்வேன். ஏனென்றால் அதில் நிறைய உணர்ச்சிகள் இணைக்கப்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட் ஒரு அரிய ரத்தினம் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாக நான் நினைக்கிறேன். மிக குறைவான அரிதான கற்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றை நாம் எப்படி பயன்படுத்துவது? என்பது முக்கியம்”
“ரிஷப் பண்ட் குறித்து எங்கள் மனதில் வெளியில் இருப்பவர்களிடமோ அவர் எப்படி விளையாடுவார் என்கின்ற சந்தேகங்கள் இருந்தது. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு அவர் விளையாட்டின் மீது எந்த விதமான சந்தேகமும் கிடையாது. எந்த இடத்தில் இருந்து விட்டாரோ அங்கிருந்து ஆரம்பித்து மிகச் சிறப்பாக விளையாடினார்”
தைரியமானவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்
மேலும் தொடர்ந்து பேசிய அஜய் ஜடேஜா “ரிஷப் பண்ட்க்கு எங்கள் ஒரு முக்கிய விஷயங்களை கிடையாது. அவர் சதம் அடிக்கும் முன்னும் பின்னும் கூட ஒரே போலவே விளையாடினார்.அவர் முன்னதாகவே கூட அவுட் ஆகி இருக்கலாம். அவருக்கு ஒரு கேட்ச் கைவிடப்பட்டது. ஆனால் இங்கு தைரியம் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது”
இதையும் படிங்க : சென்னை டெஸ்ட்.. குடும்பத்தில் இழப்பு.. 24 மணி நேரத்தில் கடமை தவறாத அபினவ் முகுந்த்.. உருக்கமான பதிவு
“ஒருவரை காதலிக்கும் பொழுது எந்தவிதமான தவறுகளும் நடந்து விடக்கூடாது என சில சந்தேகங்கள் நமக்கு உருவாகும். அப்படிப்பட்ட சந்தேகங்கள்தான் ரிஷப் பண்ட் மீது ரசிகர்களுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு பாசிட்டிவான பையன். அவருக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைக்கும் பொழுது அவர் இன்னும் நல்ல முறையில் வருவார்” என்று கூறி இருக்கிறார்.