சென்னை டெஸ்ட்.. குடும்பத்தில் இழப்பு.. 24 மணி நேரத்தில் கடமை தவறாத அபினவ் முகுந்த்.. உருக்கமான பதிவு

0
420
Abhinav mukund

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அபிநவ் முகுந்த் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது முதன்முறையாக தொகுப்பாளராக பணியாற்றினார்.

போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அபிநவ் முகுந்த் குடும்பத்தில் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கடமை தவறாமல் அவர் செய்த செயல் தற்போது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

- Advertisement -

தமிழக வீரரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருமான அபிநவ் முகுந்த் இந்திய சர்வதேச அணிக்காக டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்கிறார். டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடாவிட்டாலும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையில் அறிமுகமான அபினவ் முகுந்த் இதுவரை 7 போட்டிகளில் மொத்தமாக விளையாடி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதன்முறை விளையாட ஆரம்பித்தார்.தற்போது கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து விலகி வர்ணனையாளராக பணியாற்றி வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையிலும், ஐபிஎல் 2024 மற்றும் டிஎன்பிஎல் தொடரில் நிபுணராக பணியாற்றி இருந்தாலும் இந்தியா வங்கதேச அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றுவது அவருக்கு இது முதல் முறையாகும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் போட்டி தொடங்க 24 மணி நேரத்திற்கு முன்பாக அவரது பாட்டியின் மறைவை தொடர்ந்து பதட்டமாக இருந்ததாகவும், இருப்பினும் ரவிச்சந்திரன் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சை பாராட்டியும் சில முக்கியமான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “என் பாட்டியின் மறைவை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் நான் முதன் முறையாக எனது பணியை மேற்கொள்ள வேண்டி இருந்தது. கிரிக்கெட் வீரராக இருந்து நிபுணராக இருந்து இப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் நான் சற்று பதட்டமாக இருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் சேப்பாக்கில் இருந்தது வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. உள்ளூர் சிறுவன் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய உயரங்கள் எட்டுவதையும், மறைந்த ஷேன் வார்னேவின் ஐந்து விக்கெட்டுகள் சாதனையை சமன் செய்ததையும் பார்த்தேன்.

இதையும் படிங்க:டீம்ல இருந்து அவரை அவ்ளோ ஈஸியா தூக்க முடியாது.. இந்தியா பிட்ச் 1 நாளுக்குத்தான் அப்படி இருக்கும் – மஞ்சுரேக்கர் கருத்து

ஆனால் இது போன்ற வாய்ப்பை வழங்கியவர்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். எனது முதல் டெஸ்ட் போட்டியை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.குழப்பங்களுக்கு மத்தியில் நான் அமைதியாக இருப்பதை உறுதி செய்ய எனது பாட்டி என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்” என்று கூறி இருக்கிறார். குடும்பத்தில் நெருக்கமானவரின் மறைவை தொடர்ந்து அபினவ் முகுந்த்தின் கடமை தவறாத செயல் கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

- Advertisement -