நிதிஷ் ராணாவின் பேட்டை வைத்து 5 சிக்ஸ் அடித்த ரிங்கு சிங்; உனக்கு என்கிட்ட இருந்து வேறென்ன வேணும் கேள்? என நிதிஷ் ராணாவிற்கு – ரிங்கு சிங் கொடுத்த உருக்கமான பதில்!

0
784

“என்னுடைய பேட்டை எடுத்துச் சென்று ஐந்து சிக்சர் அடித்திருக்கிறாய். உனக்கு என்னிடமிருந்து வேற என்ன வேணும் கேள்” என்று சொன்ன நித்திஷ் ரானாவிடம் உருக்கமான பதிலை கூறியுள்ளார் ரிங்கு சிங்.

கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. இதற்கு மிகமுக்கிய காரணம், ரிங்கு சிங் கடைசி ஓவரில் அடித்த ஐந்து சிக்ஸர்கள் தான்.

- Advertisement -

205 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நித்திஷ் ரானா(45) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(83) இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துச் சென்றனர். மறுமுனையில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தனது அபார பந்துவீச்சால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா அணையின் நம்பிக்கையை சீர்குலைத்தார்.

இருப்பினும் களத்தில் நின்று கொண்டிருந்த இளம் வீரர் ரிங்கு சிங், கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்கள் விளாசி கொல்கத்தா அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத்தந்தார்.

ரிங்கு சிங் கடைசி சிக்ஸ் அடித்து வெற்றியை லேற்றுக்கொடுத்தபின் வேகமாக உள்ளே ஓடி வந்து கட்டிப் பிடித்துக் உருண்டு புரண்டு ரிங்கு சிங்கை கொண்டாடினார் கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ராணா. இதன் வீடியோ இணையதளத்தில் நெகழ்வாக பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் போட்டி முடிந்து விருதுகள் வழங்கப்பட்ட பிறகு நித்திஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் உரையாடலில் ஈடுபட்டனர். அப்போது நித்திஷ் ரானா ரிங்கு சிங்கிடம், என்னுடைய பேட்டை எடுத்துச் சென்று, கடைசியில் 5 சிக்ஸர்கள் அடித்து இத்தகைய வெற்றியை பெற்று தந்திருக்கிறாய். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உனக்கு என்னிடமிருந்து வேறு என்ன வேண்டும், தயங்காமல் கேள்!.” என்றார்.

இதற்கு சாந்தமாக பதில் கூறிய ரிங்கு சிங் “எனக்கு எதுவுமே வேண்டாம் அண்ணா. உன்னுடைய அன்பு கிடைத்தால் மட்டும் போதுமானது.” என்றார்.

(இருவரும் ஹிந்தியில் உரையாடல் நடத்தினர் தமிழில் மொழி மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது)

இருவரின் உரையாடல் வீடியோ பதிவும் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் வீடியோ இதோ: