இன்று டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததற்கு பழி தீர்த்தது. இந்த போட்டியில் பவுண்டரி எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் தற்காலிக பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் டிவேன் பிராவோ அற்புதமான ஆலோசனைகளை வழங்கினார்.
ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடரை முழுவதுமாக விளையாடுகின்ற காரணத்தினால், தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளராக டி20 கிரிக்கெட்டில் இல்லை வெஸ்ட் இண்டீஸ் டிவேன் பிராவோவை ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 127 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.
இந்தப் போட்டியின் போது ஆப்கானிஸ்தான அணி பந்துவீசி கொண்டிருந்த பொழுது, பவுண்டரி எல்லையில் இருந்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ பந்தில் வேகத்தை கொடுத்து விடாதீர்கள் என ஒவ்வொரு முறையும் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுறுத்தி கொண்டே இருந்தார். ஆடுகளத்தை கழித்து விட்ட அவர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு வேகமாக வீசக்கூடாது என தொடர்ந்து அந்த அறிவுரையை கத்தி கத்தி கூறிக் கொண்டே இருந்தார்.
மேலும் இன்றைய போட்டியில் பிராவோ கூறியபடி பந்தில் வேகம் தராமல் இருப்பதற்கு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் சிறப்பான வேலை ஒன்றை செய்தார். டி20 கிரிக்கெட்டில் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக உருவெடுத்து வரும் நூர் அகமதுவை ஒரு ஓவருடன் நிறுத்திவிட்டார். அவர் தான் வீசிய முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க : எங்க தேசத்து மக்களுக்கு மகத்தான வெற்றி.. 2023ல விட்டத புடிச்சிட்டோம் – ரஷித் கான் பேட்டி
இந்த நிலையில் மிதவேகப்பந்துவீச்சாளரான குல்பதின் நைபை நான்கு ஓவர்கள் பந்து வீச வைத்தார். இதில் அவர் நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பிராவோ கொடுத்த ஐடியாவும், ரஷித் கானின் சமயோசித திட்டமும்தான் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.