இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஐபிஎல் தொடரை ஒரு வாரம் கழித்து நடத்துவதற்கு மூன்று மைதானங்களை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அதிகரித்திருக்கும் பதட்டத்தின் காரணமாக தற்பொழுது ஐபிஎல் தொடர் ஒரு வாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் போட்டியை நடத்துவதற்கு பிசிசிஐ மேற்கொண்டு முயற்சி செய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது.
பிசிசிஐ புதிய திட்டம்
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரை மேற்கொண்டு நடத்துவதற்கு வெளிநாடுகளான இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா தயாராக இருப்பதாக தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக மீதம் இருக்கும் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியில் செல்ல விரும்பவில்லை.
இந்த நிலையில் மேற்கொண்டு இருக்கும் பதினாறு போட்டிகளையும் தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் என மூன்று நகரங்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது. இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டம் எந்த வகையிலும் தென்னிந்தியாவை பாதிக்காது என்பதால் பிசிசிஐ இப்படியான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
காத்திருக்கும் வேறொரு சோகம்
தற்பொழுது ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தங்கள் அணியில் இடம் பெற்று இருந்த அனைத்து வீரர்களும் தங்கள் நாட்டிற்கும் தங்கள் நகரங்களுக்கும் திரும்பி விட்டார்கள் என்று கூறி இருக்கிறது. இதுபோலவே மற்ற எல்லா அணிகளின் வீரர்களும் ஏறக்குறைய கிளம்பி இருப்பார்கள். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக நாடு திரும்பி இருப்பார்கள்.
இதையும் படிங்க : சுப்மன் கில் கிடையாது.. இவர் தான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கனும்.. அணில் கும்ப்ளே கருத்து
எனவே பிசிசிஐ அடுத்த வாரத்தில் ஐபிஎல் தொடரை உடனடியாக ஆரம்பிக்க முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் எல்லா வெளிநாட்டு வீரர்களும் சொந்த நாட்டிற்கு சென்று இருப்பார்கள். மேலும் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு கொடுத்த கால அளவும் முடிகின்ற சூழ்நிலை வரும். எனவே வெளிநாட்டு வீரர்கள் தொடர்பாக பிசிசிஐக்கு தற்போது புதிய தலைவலி உருவாகியிருக்கிறது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் எப்படி சமாளிக்கிறது என்பதை பொறுத்து ஐபிஎல் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.