ஆர்சிபி அணியில் ரோகித்.. ஹர்திக்கை விட பெரிய சம்பவம்.. வாய்ப்பு உண்டா? – ஏபி டிவிலியர்ஸ் பதில்

0
171
Rohit

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி ஆர்சிபி அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினால், இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு ரோஹித் சர்மா மெகா ஏலத்திற்கு வருவார் என கருத்துக்கள் பரவி வருகிறது. இப்படியான நிலையில் இதற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் கிடையாது லீடர்

ரோகித் சர்மா பற்றி பலரும் அவர் வெறும் கேப்டன் மற்றும் கிடையாது அவர் ஒரு லீடர் என்று கூறுகிறார்கள். ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியில் வைத்து பார்க்கவே முடியாது என்று சொல்லி வருகிறார்கள். அவரும் இந்திய கேப்டனாக டி20 உலகக் கோப்பையை வென்றெடுக்கிறார். எனவே மீண்டும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ரோகித் சர்மா எந்த அணிக்கு விளையாடினாலும் கேப்டனாக மட்டுமே விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதே சமயத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியில் வந்தால் ஆர்சிபி அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் எனவும், கேப்டனாக ரோகித் சர்மா ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்று தருவார் எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக இருக்கும்

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “ரோகித் சர்மாவை பற்றிய கருத்துக்களை பார்த்து நான் உண்மையில் சிரித்து விட்டேன். அவர் மும்பை அணியை விட்டு ஆர்சிபி அணிக்கு வந்தால் மிகப்பெரிய கதையாக இருக்கும். அது ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்ததை விட பெரிய கதையாக இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக மாறும்.அவர்மும்பை அணியை விட்டு ஆர்சிபி அணியில் இணைவதற்கான வாய்ப்பு 0.01% மட்டுமே இருப்பதாக நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : நான் ரோகித்தையே பார்த்தவன்.. நான் நம்புறது ஒரு விஷயத்தை மட்டும்தான் – பங்களாதேஷ் பவுலர் பேட்டி

“மேலும் ஆர்சிபி அணிக்கு ஃபாப் கேப்டனாக தொடரலாம். 40 வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே. இது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் சில சீசன்களாக அந்த அணிக்கு விளையாடி நன்றாக பழகிவிட்டார். அவர் ஆர்சிபி அணிக்காக கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த அணிக்காக அவர் சிறப்பான வீரராக விளையாடியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -