“இந்த இக்கட்டான சமயத்துல நீ ஒன்னு மட்டும் பண்ணு தம்பி.. அதுவே போதும்” இந்தியன் 360-க்கு அட்வைஸ் கொடுத்த ஒரிஜினல் 360!

0
351

சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கும் சூரியகுமார் யாதவிற்கு அறிவுரை கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

இந்திய அணியில் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்பட்டு வரும் சூரியகுமார் யாதவ், கடந்த 2022ஆம் ஆண்டு மிகச்சிறந்த பார்மில் இருந்தார். நம்பர் ஒன் டி20 வீரராகவும் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு 31 ti20 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 1200 ரன்கள் வரை விலாசினார். அதில் 2 சதங்கள் 9 அரைசதங்கள் அடங்கும்.

- Advertisement -

இப்படிப்பட்ட வீரருக்கு 2023 ஆம் ஆண்டு நன்றாக துவங்கியிருந்தாலும், ஒருநாள் தொடர்கள் எதிர்பார்த்த ஒரு அளவிற்கு அமையவில்லை. மிக மோசமான பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கும் வந்திருக்கிறார்.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, மூன்று போட்டிகள் விளையாடி மூன்றிலும் முதல் பந்தலிலேயே கோல்டன் டக் அவுட் ஆனார். அப்படியே ஐபிஎல் போட்டிகளுக்கு வந்த சூரியகுமார் யாதவ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு அவுட் ஆனார்.

தற்போது இப்படிபட்ட மோசமான பார்ம் மற்றும் ரன்கள் கட்டாயம் அடித்தே ஆகவேண்டும் எனும் இக்கட்டான சூழலில் இருக்கும் சூரியகுமார் யாதவிற்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

- Advertisement -

“சூரியகுமார் யாதவ் தற்போது “நான் ஏதேனும் ஒன்றை செய்தாக வேண்டும்” என்கிற இக்கட்டான சூழலில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் தனது பேட்டிங்கில் பதட்டம் கொள்ளாமல் பழைய திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும். மிகச் சிறப்பாக விளையாடிய போது என்ன செய்ததால் ரன்கள் வந்தது மற்றும் தன்னுடைய ஆரம்பகால கிரிக்கெட்டில் பெற்ற சில நுணுக்கங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும். அப்போது மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

எளிதாக அவுட்டாகி விடுகிறோம் என்பதற்காக ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு திட்டத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அடிப்படைகளை நினைவில் கொண்டு பேட்டிங் செய்தால் மட்டுமே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளிவர முடியும். இதுபோன்ற சூழலில் இன்னும் பலம்மிக்க வீரராக உருவாக முடியும்.” என்றும் கூறினார்.