ஜிம்பாப்வேவில் நடைபெறும் T10 தொடரில் களமிறங்கும் 3 சிஎஸ்கே சிங்கம்.. 5 அணிகள் விவரம் இதோ

0
4324

கிரிக்கெட் எப்போதுமே பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி ,டி20 போட்டி என தனது வடிவத்தை மாற்றிக்கொண்ட கிரிக்கெட் தற்போது பத்து ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. ஏற்கனவே அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் பத்து ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வரிசையில் தற்போது இணைந்து இருக்கிறது ஜிம்பாப்வே கிரிக்கெட். ஜிம்பாவே கிரிக்கெட் பொருளாதார வகையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஐசிசி கொடுக்கும் உதவித்தொகை வைத்து அந்த அணி வீரர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

புதிய தொடர்

இந்த நிலையில் ஜிம்பாப்வேவில் அதிக அளவு கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் கிரிக்கெட்டை மேலும் கவர்ச்சிகரமாக கொண்டு செல்ல ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் டென் டி குளோபல் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய தொடரை நடத்துகிறது.

5 அணிகள்

இதற்கு ஜிம் ஆப்ரோ டீ டன் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. ஹராரே ஹரிக்கன்ஸ், ஜோபர்க் பப்லோஸ், டர்பன் குவாண்டர்ஸ்,கேம்ப் டவுன் சாம்ப் ஆர்மி என்று ஐந்து அணிகள் பங்கேற்கிறது. இது தொடரின் முதல் போட்டி வரும் இருபதாம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விதிகள்

இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு வரும் ஜூலை இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் குறைந்தபட்சம் ஆறு பேர் ஜிம்பாப்வே வீரர்களாக இருக்க வேண்டும். இதில் ஒரு ஜிம்பாப்வே வீரர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய வீரராக இருப்பார்.

- Advertisement -

இதேபோன்று டிராப்ட் முறைக்கும் முன்பு ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் நான்கு சர்வதேச வீரர்களை முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அதன்படி இந்த பட்டியலில் மூன்று சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்று இருப்பது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அணி விவரம்

அதன்படி ஹராரே அணியில் இயன் மார்கன், எவன் லீவிஸ், ஷான்நவாஸ் தஹானி , சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  கேப்டவுன் அணியில் ராஜபக்சே, கரீம் ஜன்னத், ரஹ்மனுல்லா குர்பாஸ், சிஎஸ்கே வீரர் மகீஷ் தீக்சனா ஆகியோர் உள்ளனர். இதேபோன்று டர்பன் அணியில் ஆசிப் அலி, சிஎஸ்கே வீரர் சிசந்தா மகளா, ஜார்ஜ் லிண்டே, ஹசரத்துல் ஜசாய் ஆகியோர் உள்ளனர்.

ஜோபர்க் அணியில் இந்திய வீரர் யூசுப் பதான், முஸ்பிகுர் ரஹ்மான், டாம்  பேன்டன், நூர் அகமது ஆகியோர் உள்ளனர். புல்வாயோ அணியில் சிக்கந்தர் ராசா, ஆஸ்டன் டர்னர், டைமல் மில்ஸ், பென் மேக்டேர்மாட் ஆகியோர் உள்ளனர். இந்த தொடர் ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் ஒரு மிகச்சிறந்த தருணம் என அந்த கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் கிவ் மோர் மக்கோணி தெரிவித்துள்ளார்.