2024 டி20 உலககோப்பை.. கோலியால் ரிங்கு சிங்குக்கு ஏற்பட்ட பிரச்சனை.. ஒரே வழிதான் இருக்கு!

0
135
Rinku

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு மாதிரியாக முடிவெடுத்தது தற்பொழுது டி20 உலகக் கோப்பைக்கு என்ன மாதிரியான அணியை அமைப்பது என்கின்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவை அழைத்ததோடு, முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியையும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு என்ன மாதிரியான அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.

அதே சமயத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் வருகை சில முக்கிய இளம் வீரர்கள் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதையும், அப்படியே இடம் பெற்றாலும் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதையும் தடுக்கும் விதமாக மாறி இருக்கிறது.

துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் விளையாடுவார்கள். மூன்றாவது நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் வருவார்கள். ஐந்தாவது, ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இருப்பார்கள். ஏழாவது இடத்தில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வந்துவிடுவார்கள்.

- Advertisement -

இப்பொழுது விராட் கோலி அணியில் இடம் பெற்று இருக்கின்ற காரணத்தினால், பினிஷிங் இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற ரிங்கு சிங் இடம்பெறுவதற்கு இடமில்லாமல் போகிறது.

தற்பொழுது இரண்டு மூத்த இந்திய பேட்ஸ்மேன்கள், குறிப்பாக விராட் கோலி அணிக்குள் வந்திருப்பது இளம் வீரர் ரிங்கு சிங்கின் இடத்திற்கு பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சனைக்கு என்ன மாதிரியான தீர்வை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கண்டறிகிறது என்பதை பொறுத்துதான், இந்திய பேட்டிங் யூனிட்டின் கீழ் வரிசை பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அதிரடியாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக வருவார்கள் என்றால், ரிங்கு சிங் விளையாடுவது உறுதியாகிவிடும்!