2024.. ஜெய்ஸ்வால் சிவம் துபேவுக்கு அடிக்க இருக்கும் அதிர்ஷ்டம்.. பிசிசிஐ தரப்பில் நல்ல செய்தி

0
212
BCCI

தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே செயல்பாடுகள் அமைந்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஜெய்ஸ்வால் அறிமுகமானார். தனது சர்வதேச முதல் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அவருக்கு அதே தொடரில் டி20 இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் முதல் பந்தில் இருந்தே அச்சமற்ற துவக்கத்தை தரக்கூடிய வீரராக இந்திய அணிக்கு இருக்கிறார். கூடுதலாக இவர் இடது கை வீரர் என்பதால் சிறப்பானவராக மாறுகிறார். இதன் காரணமாக இவருக்கு இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் இந்திய டி20 அணியை கேப்டனாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா காயத்தால் அணிக்கு வெளியில் இருக்கிறார். ஐபிஎல் தொடருக்குள் சரியாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரே இந்திய கிரிக்கெட்டில் இல்லை. இதன் காரணமாக ஏதாவது விரும்பத்தகாத சூழல் அமைந்தால், அவருடைய இடத்திற்கு சரியான வீரர் தேவை என்பதால் சிவம் துவே பரிசோதிக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்ததை விடவே அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

எனவே சிவம் துபே சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து திரும்ப வந்தாலும் கூட, டி20 உலக கோப்பை அணியில் சிவந்துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த இரு வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தினால், இந்த இரு வீரர்களுக்கும் வெகுமதியாக பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தை தர முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டில் இவர்கள் பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் இந்த இரு வீரர்களுக்கும் அதிர்ஷ்டம் கொண்டதாக மாறி இருக்கிறது!