இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சிறப்பு பேட்ஸ்மேன் ஆன செதெஷ்வர் புஜாரா தற்போது இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரிலும், ராயல் லண்டன் கப் தொடரிலும் விளையாடி வருகிறார்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் சற்று தடுமாறி வந்த புஜாரா தான் இழந்த பேட்டிங் பார்மை மீட்க இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட சசக்ஸ் அணிக்கு ஒப்பந்தம் ஆனார்.
இந்த ஆண்டு அவர் கவுண்டி கிரிக்கெட் சீசனில் 13 இன்னிங்சில் 1094 ரன்களை குவித்துள்ளார். இதில் மொத்தம் 5 சதங்கள் அடங்கும். இதில் மூன்று இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 231. மேலும் கவுண்டி தொடரின் இடையில் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து சசக்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
காமெடி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மிகச்சிறப்பாக முடித்த புஜாரா தற்போது ராயல் லண்டன் கப் ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வார்விக்ஸயர் அணிக்கு எதிராக 79 பந்துகளுக்கு 107 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இதில் ஒரே ஓவரில் 22 ரன்களையும் விளாசி இருந்தார்.
இன்று இதைவிட அதிரடியாக சர்ரே அணிக்கு எதிராக 20 பவுண்டரி ஐந்து சிக்ஸர்களோடு 131 பந்துகளில் 174 ரன்களை குவித்து தள்ளியிருக்கிறார். 103 பந்துகளில் சதமடித்த புஜாரா, அடுத்த இருபத்தி எட்டு பந்துகளில் 74 ரன்களை விளாசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதற்கான டிவிட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
Pujara has 5 hundreds in county & 2 hundreds in RLODC so far in this season for Sussex. pic.twitter.com/v1I7fXH1mP
— Johns. (@CricCrazyJohns) August 14, 2022