56 ரன்கள் அடித்து.. ஜெய்ஸ்வால் 89 ஆண்டு டெஸ்ட் சாதனையை உடைத்தார்.. லெஜெண்டுகளின் வரிசையில் இடம்பெற்றார்

0
612
yashasvi jaiswal

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றத்தில் இருந்த போதிலும் ஜெய்ஸ்வால் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கின் மூலமாக வலுவான நிலைக்கு திரும்பியது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 89 ஆண்டு கால சாதனையை உடைத்து தனது வரலாற்று புத்தகத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

சென்னையில் தொடங்கிய இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 34 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் தடுமாறினாலும் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு முனையில் நிலைத்து நின்று அபாரமாக விளையாடினார். ரோஹித் சர்மா, விராட் கோலி என முன்னணி வீரர்கள் வெளியேறினாலும் இந்த 22 வயது இளம் வீரர் ஒரு முனையில் நங்கூரமாக நிலைத்து நின்று ஆடினார். 118 பந்துகளை எதிர்கொண்டு ஒன்பது பௌண்டரிகளோடு 56 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதற்குப் பிறகு சரிவில் இருந்த இந்திய அணியை ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக மீட்டெடுத்தனர். ஜடீஜா 86 ரன்கள், ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 102 ரன்கள் குவித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் நான்கு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க, தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்ஸ்களில் 750 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பேட்ஸ்மேன் ஆக மாறி இருக்கிறார். இந்த அபாரமான சாதனை மூலமாக 1935 ஆம் ஆண்டு 747 ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் 747 ரன்கள் குவித்த ஜார்ஜ் ஹெட்லியின் 89 ஆண்டு கால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

மேலும் ஜெய்ஸ்வால் இந்த தொடரின் மூலமாக பல சாதனைகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவு இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்தில் இருப்பதால் இன்னும் நான்கு நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் பெரிய டார்கெட்டை வங்கதேச அணிக்கு செட் செய்யும்.

இதையும் படிங்க:24 ஆண்டு சாதனை.. 4 வீரர்களின் ரெக்கார்டை உடைத்த அஸ்வின் ஜடேஜா.. சேப்பாக்கில் புது வரலாறு படைத்தார்கள்

சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் 10 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் :

755* – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)

747: ஜார்ஜ் ஹெட்லி (மேற்கிந்திய தீவுகள்)

743: ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்)

687: டேவ் ஹூட்டன் (ஜிம்பாப்வே)

680: சர் விவ் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

- Advertisement -