இந்திய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாட வருவதற்கு முன்பாக பந்துவீச்சில் தான் எவ்வளவு சிறப்பாக இருக்கிறேன் என்று காட்ட விரும்புவதாக யுஸ்வேந்திர சாகல் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராக இருந்த யுஸ்வேந்திர சாகல் தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாடுகிறார்.
உள்ளே வெளியே ஆட்டம்
2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது யுஸ்வேந்திர சாகலை திடீரென நீக்கி ராகுல் சாகரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தார்கள். அந்த முறை இந்திய அணி டி20 உலக கோப்பை முதல் சுற்றில் தோற்று பரிதாபமாக வெளியேறி வந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இடம் கொடுக்கவில்லை.
மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. பிறகு இந்திய அணியில் இருந்தும் வாய்ப்புகள் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் சாகல் தற்பொழுது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அங்கு கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இந்திய அணிக்கு நிரூபிப்பேன்
இதுகுறித்து யுஸ்வேந்திர சாகல் பேசும் பொழுது ” முதலாவதாக எனக்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கொடுத்த பிரிண்டன் சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் திறமையான வீரர் கிரீஸ் பட்டேலை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். அவருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்”
இதையும் படிங்க : 88 ரன்.. சுருண்ட நியூசிலாந்து.. 514 ரன் லீடிங்கில் இலங்கை அணி.. சுவாரசியமான கட்டத்தில் 2வது டெஸ்ட்
“கவுண்டி கிரிக்கெட் உண்மையில் கடினமானது. இது எனது திறமைகளை திறமையானவர்களுக்கு எதிராக பயன்படுத்த உதவியது. அடுத்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. அப்பொழுது நான் பந்துவீச்சில் எவ்வளவு சிறப்பாக இருக்கிறேன் என்று அவர்களுக்கு காட்ட விரும்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.