24 விக்கெட்.. இந்திய அணியின் அந்த தொடருக்கு முன்.. நான் யாருன்னு காட்ட நெனச்சேன் – சாகல் பேட்டி

0
24
Team india and Yuzvendra chahal

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருந்த யுஸ்வேந்திர சஹால் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

கவுண்டி லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சஹால் அந்தத் தொடர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் லீக் தொடரானது இங்கிலாந்து வீரர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய வீரர்களுக்கும் இழந்த தங்களது பார்மை மீட்டெடுக்க ஒரு நல்ல தொடராக கருதப்படுகிறது. இந்திய அணியின் இளம் வீரர்களான கில், சாய் சுதர்சன், பிரித்விஷா, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களும் இந்த தொடரில் விளையாடி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னணி மூத்த சுழற் பந்துவீச்சாளர் சகால் இந்திய சர்வதேச அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறார். நான்கு நாள் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு மொத்தமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அக்டோபர் 11ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள ரஞ்சி தொடருக்கு தயாராகும் விதமாக தற்போது இந்தியா திரும்பி இருக்கும் சஹால் இங்கிலாந்தில் விளையாடியது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் மிகவும் கடினமான ஒன்று. சிறந்த கிரிக்கெட் நிலைமைகளுக்கு எதிராக தனது திறமைகளை வெளிக்காட்ட எனக்கு இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அடுத்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், எனது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறினார்.

மேலும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் வகையில் சஹால் கூறும் போது “முதலாவதாக இந்த தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த பிரிண்டன் சாருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் என்னை 18 வயது இளம் கிரிக்கெட் வீரரான க்ரிஷ் பட்டேலுக்கு அறிமுகப்படுத்தினார்கள். விளையாட்டில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.

இதையும் படிங்க:தோனியா விராட் கோலியா?. எல்லா காலத்திலும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் – நியூஸி முன்னாள் வீரர் தேர்வு

சர்வதேச அளவில் அவர் விளையாடுவதற்கு என்னால் முடிந்த வகையில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சஹால் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தும் 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் விரைவாக இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -