எனக்கு தோனி வேண்டாம்.. அந்த விஷயத்துக்கு ரோகித் சர்மாவதான் செலக்ட் பண்ணுவேன் – யுவராஜ் சிங் தேர்வு

0
42
Yuvraj

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் முன்வைக்கப்பட்ட சுவாரசியமான கேள்விகளுக்கு அதைவிட சுவாரசியமாக பதில் அளித்து இருக்கிறார்.

யுவராஜ் சிங் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் ஆரம்பித்து, மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் இரண்டு உலகக் கோப்பைகளை வென்று, விராட் கோலி தலைமையின் கீழ் ஓய்வு பெற்றார். அவர் இந்த மூவருடைய தலைமையின் கீழ் நீண்ட காலம் விளையாடி இருக்கிறார். நடுவில் சிறிது காலம் டிராவிட் தலைமையிலும் விளையாடினார்.

- Advertisement -

ரூட்டை விட விராட் கோலி முக்கியம்

யுவராஜ் சிங் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் விராட் கோலி அல்லது ஜோ ரூட் இருவரில் யாரை தேர்வு செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு விராட் கோலியை யுவராஜ் சிங் தேர்வு செய்தார். அதற்கு அவர் நீண்ட விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” இது மிகவும் கடினமான கேள்வி. இதற்கு நாம் எங்கு விளையாடுகிறோம் என்ன மாதிரி வடிவத்தில் விளையாடுகிறோம் என்பதை வைத்து தான் முடிவு செய்ய முடியும். இங்கிலாந்து என்றால் ஜோ ரூட்டை நாம் தேர்வு செய்யலாம். உலகம் முழுக்க என்றால் விராட் கோலியைத் தான் நான் தேர்வு செய்வேன். அவர் பார்மில் இருந்தால் உலகத்தின் எந்த ஆடுகளத்திலும் சேதாரத்தை ஏற்படுத்துவார்”

- Advertisement -

தோனி கிடையாது ரோகித் சர்மாதான்

மேலும் தன்னுடைய அணிக்கு கேப்டனாக யாரை கொண்டு வருவார் என்ற பொழுது தோனியை தள்ளி வைத்துவிட்டு யுவராஜ் சிங் ரோஹித் சர்மாவை தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “டி20 கிரிக்கெட் ஆக இருந்தால் நான் நிச்சயம் ரோஹித் சர்மாவுடன் செல்வேன். அவர் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருப்பார். மேலும் கேப்டனாகவும் ஆட்டத்தை மாற்றுவார். அதனால் ரோகித் சர்மா என்னுடைய முதல் தேர்வாக இருப்பார்”

இதையும் படிங்க : ரோகித் கோலி இதுக்கு வெட்கமோ தயக்கமோ எதுக்கு?.. ரசிகர்களும் கொஞ்சம் அமைதியா இருங்க – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இதைத்தொடர்ந்து தோனி அல்லது விராட் கோலி இருவரும் ஒரே ஐபிஎல் அணியில் இருந்தால் யாரை விற்று விடுவீர்கள் என்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த யுவராஜ் சிங் “நான் இந்த கேள்விக்கு யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்தால், அது நாளை தலைப்புச் செய்தியாக இருக்கும் எனவே நான் இதற்கு பதில் சொல்ல மாட்டேன்” என்று நகைச்சுவையாக மறுத்துவிட்டார்.

- Advertisement -