ரோகித் கோலி இதுக்கு வெட்கமோ தயக்கமோ எதுக்கு?.. ரசிகர்களும் கொஞ்சம் அமைதியா இருங்க – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
12
Aakash

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரது பேட்டிங் பார்ம் குறித்து தமக்கு கவலை இல்லை என இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ரன்கள் எடுக்காமல் ஏமாற்றம் கொடுத்தார்கள். அவர்கள் மிகவும் சாதாரணமான முறையில் தங்கள் விக்கெட்டையும் இழந்தார்கள்.

- Advertisement -

எனக்கு கவலை கிடையாது

இந்த நிலையில் இவர்கள் பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் குறித்து எனக்கு எந்த வித கவலையும் கிடையாது. ரன்கள் அடிக்கப்படாத காலங்களில் இப்படியான பேச்சுகள் எல்லாம் வரும். நீண்ட காலமாக ரன்கள் எடுக்காமல் இருந்தால் இதுகுறித்து கவலைப்படலாம். ஆனால் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலி ரன்கள் எடுத்தார் மேலும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி இருந்தார்”

“டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள நினைத்தார்கள். இலங்கைத் தொடருக்கு இருவரும் திரும்பி வந்த பொழுது ரோகித் சர்மா பேட்டிங்கில் எந்த சிரமத்தையும் பார்க்க முடியவில்லை. விராட் கோலி ரன்கள் அடிக்க
வில்லை அவ்வளவுதான்”

- Advertisement -

வெட்கமோ தயக்கமோ தேவையில்லை

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா ” மேலும் இவர்கள் இருவருமே உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் விளையாடவில்லை. இவர்கள் இருவரும் அதில் விளையாடி இருக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்க விரும்புவது எனக்கு புரிகிறது. ஒருவேளை இவர்கள் விளையாடி இருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதில் வெட்கமோ தயக்கமோ தேவையில்லை”

இதையும் படிங்க : பும்ராவின் 15 பந்து.. 4 முறை அவுட் ஆன விராட் கோலி.. ஜடேஜாவிடமும் பரிதாபம்.. களத்தில் என்ன நடந்தது?

“சச்சின் டெண்டுல்கர் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி நாம் பார்த்திருக்கிறோம். மேலும் பல முன்னணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். இப்படியான தொடர்கள் பெரிய வீரர்களின் பயிற்சிக்காகத்தான் வருகிறது. அதே சமயத்தில் அந்த தொடரில் அஸ்வின் ஜடேஜா விளையாடவில்லை அவர்கள் பங்களாதேஷ் தொடரில் நன்றாக விளையாடினார்கள். பொதுவாக பேட்டி அல்லது பந்துவீச்சில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அந்த நேரத்தில் ஏதும் பெரிய விமர்சனங்களை உருவாக்க வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -