6 சிக்ஸ் நான் அடிச்சு முடிச்சதும்.. தோனி என் கிட்ட இதத்தான் சொன்னார் – யுவராஜ் சிங் வெளியிட்ட தகவல்

0
688
Yuvraj

2007ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தார். அப்போது தோனி தன்னிடம் என்ன கூறினார் என யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியின் போது யுவராஜ் சிங்கை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ஏதோ கூற மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கோபமடைந்த யுவராஜ் சிங்கை தோனி சமாதானப்படுத்தினார். இதற்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து யுவராஜ் சிங் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகக் கோப்பை கதாநாயகன் யுவராஜ் சிங்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பெரிய ரன்கள் குவித்ததும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முப்பது பந்தில் 70 ரன்கள் அதிரடியாக எடுத்ததுமே, இந்திய அணி அந்த டி20 உலக கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்று கூறலாம்.

இந்த தொடர் முழுக்கவே யுவராஜ் சிங் வேற ஒரு வீரராக இருந்தார். அந்தத் தொடரில் ஒட்டுமொத்த அணியினரும் சேர்ந்து விளையாடி தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தார்கள். மேலும் இறுதிப்போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அமைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருந்தது. இந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்ததும் தோனி தன்னிடம் என்ன கூறினார் என யுவராஜ் சிங் இப்பொழுது தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தோனி இதைத்தான் சொன்னார்

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ‘நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் தோனி என்னிடம் ‘நீங்கள் எப்பொழுது எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கும்” என்று கூறினார்.

“பிளின்டாப் எனக்கு அந்த போட்டியில் இரண்டு சிறந்த பந்துகளை வீசினார். 18வது ஓவரின் கடைசி பந்தில் நான் ஒரு சிங்கிள் ரன் எடுத்தேன். அப்பொழுது பிளின்டாப் ஏதோ சொல்ல நான் கோபமடைந்து நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அதற்குப் பிறகு எனக்கு கோபம் அதிகமாக ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்தேன்”

இதையும் படிங்க : கிங் பிரின்ஸ் செய்த காரியம்.. நொந்து போன ரசிகர்கள்.. கோலிக்கு என்ன பிரச்சனை?.. தொடரும் தலைவலி

“பிறகு முதல் பந்தை நான் மைதானத்தை விட்டு வெளியில் அடித்தேன். அது எவ்வளவு பெரிய வெற்றி என்பதை உணராமல் நான் அப்பொழுது நின்று இருந்தேன். ஆனால் இந்த பிரச்சினையை எல்லாம் பிளின்டாப் மைதானத்திலேயே விட்டு விட்டார். போட்டி முடிந்ததும் அவர் எனக்கு இதையெல்லாம் கூறி கை குலுக்கினார். இதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -