கிங் பிரின்ஸ் செய்த காரியம்.. நொந்து போன ரசிகர்கள்.. கோலிக்கு என்ன பிரச்சனை?.. தொடரும் தலைவலி

0
250
Virat

இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் மூவரும் ஏமாற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தமடைந்திருக்கிறார்கள்.

இந்த துவங்கி இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக சிவப்பு மண்ணில் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இரு அணிகளிலும் மூன்று வேகப்பந்து பேச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏமாற்றிய மூன்று நட்சத்திரங்கள்

இன்றைய போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க, கொஞ்சம் மேகமூட்டமான சூழ்நிலையும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகத்தை கொடுத்தது. இதன் காரணமாக இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். பந்து எல்லா விதத்திலும் பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்தது.

இந்த நிலையில் ஹஸன் மக்மூத் பந்துவீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 19 பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் ஆறு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 8 பந்துகளை சந்தித்து லெக் சைடு கீப்பருக்கு சென்ற பந்தை விளையாடி துரதிஷ்டவசமாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இந்திய ரசிகர்களை கோபப்பட வைத்தார்.

- Advertisement -

விராட் கோலிக்கு தீராத பிரச்சனை

இந்த நிலையில் உள்ளே வந்த விராட் கோலி பந்தை டிரைவ் செய்த விதம் மற்றும் தடுத்து ஆடிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவருடைய பேட்டிங் டச்சை பார்க்கும் பொழுது அபாரமான தன்னம்பிக்கை மற்றும் பார்மில் இருப்பது போல தெரிந்தது. இதனால் ரசிகர்கள் நல்ல கிரிக்கெட் பார்க்க தயாரானார்கள்.

இப்படியான நிலையில் ஹசன் மக்மூத் ஆறாவது ஸ்டெம்பில் வெளியில் வீசிய பந்தை கவர் டிரைவர் விளையாட சென்று வழக்கம்போல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றவர்கள் ஆட்டம் இழந்த விதத்தை விட விராட் கோலி ஆட்டம் இழந்த விதம்ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் அவருக்கு இருக்கும் நீண்ட கால பிரச்சனையை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே விளையாடி ஆட்டம் இழந்தார். இதை அவர் மாற்றிக் கொள்ளாமல் பெரிய ரன்களுக்கு இனி செல்வது கடினம்.

இதையும் படிங்க : 29 வயது இந்திய வீரர்.. அவர ரொம்ப குறைவா மதிப்பிடறிங்க.. எதிர்கால சக்தி – தினேஷ் கார்த்திக் கருத்து

இந்திய அணி தற்போது முதல் செஷன் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருக்கிறது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 62 பந்தில் 37 ரன்கள், ஐந்தாவது இடத்தில் பேட்டிங் அனுப்பப்பட்ட ரிஷப் பண்ட் 44 பந்தில் 33 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.

- Advertisement -