இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் தன்னுடைய 38வது வயதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். பலரும் அவரது ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சக வீரரான யுவராஜ் சிங் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஷிகர் தவானை பொருத்தவரையில் இந்திய கிரிக்கெட்டில் எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு வீரராக இருந்திருக்கிறார். தனக்கு வாய்ப்புகள் இந்திய அணிகள் கிடைக்காத பொழுது கூட தன்னுடைய இடத்தில் வாய்ப்பு பெற்ற கில் நல்ல முறையில் விளையாடுவதற்கு வாழ்த்து கூறியவர். இதன் காரணமாக சமூக வலைதளத்தில் ரசிகர்களும் அவருக்கு பரவலான வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஐசிசி தொடர்களின் நாயகன்
ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் சிறந்த பேட்டிங் செயல் திறனை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேனாக இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் முதன்முறையாக ஐசிசி தொடரில் களமிறங்கி அப்பொழுது இருந்தே ஐசிசி தொடர்களில் நல்ல முறையில் விளையாடி வந்தார்.
2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அந்தப் போட்டியில் ஷிகர் தவான் அதிரடியான துவக்கத்தை கொடுத்திருந்தார். அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஷிகர் தவான் விளையாடிய விதத்தில் தாங்கள் பயத்துடன் இருந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் உண்மையில் கப்பார்
இந்த நிலையில் ஷிகர் தவானுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் யுவராஜ் சிங் கூறும் பொழுது “உங்களுடைய அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஷிகர் தவான்! உங்களைப் போன்ற கலகலப்பான ஒரு மனிதருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி! நீங்கள் எப்பொழுதுமே கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதேபோல களத்திற்கு வெளியேயும் சிறப்பானவற்றை கொடுத்து இருக்கிறீர்கள்.
உங்களது அச்சமற்ற ஆட்டங்கள் குறிப்பாக உங்களுக்கு பிடித்த ஐசிசி தொடர்கள் மற்றும் அனைத்து வடிவங்களிலும் மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மன்ஸ்கள், உங்களை எதிரணிகள் அஞ்சும் உண்மையான கப்பார் ஆக்கிவிட்டன.
இதையும் படிங்க : இங்கிலாந்து இது அநியாயம்.. ஆட்டத்தையே திருப்பிட்டிங்க.. முதல்ல ரூல்ஸ மாத்துங்க – இலங்கை அணி மேத்யூஸ் குற்றச்சாட்டு
இதுவெல்லாம் சில அரிய சாதனைகள். இது குறித்து நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்.மேலும் உங்களுடைய ஓய்வு காலத்தில் லெஜென்ஸ் கிரிக்கெட் தொடரில் விளையாட உங்களை நான் அழைக்கிறேன். எல்லாம்நல்ல முறையில் அமையும் தம்பி. இறைவன் பார்த்துக் கொள்வார்” என்று வாழ்த்தியிருக்கிறார்.